Header Logo

செய்திகள்
மீண்டும் சாம்பியன்: ரக்பி லீக் கிண்ணத்தை வென்றது கண்டி திரித்துவக் கல்லூரி!

Jun 27, 2026 - 06:50 PM -

0

மீண்டும் சாம்பியன்: ரக்பி லீக் கிண்ணத்தை வென்றது கண்டி திரித்துவக் கல்லூரி!

பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரியை 20-07 என்ற புள்ளிக் கணக்கில் தோற்கடித்து, பாடசாலைகளுக்கு இடையிலான லீக் ரக்பி போட்டித் தொடரின் சாம்பியன் பட்டத்தை தொடர்ச்சியாக இரண்டாவது முறையும் கண்டி திரித்துவக் கல்லூரி  இன்று (26) கைப்பற்றியுள்ளது.

 

இந்த போட்டித் தொடர் முழுவதும் தோல்வி எதையும் சந்திக்காமல் முதலிடத்திற்கு முன்னேறிய திரித்துவக் சிங்கங்களுக்கு, இந்த வெற்றியின் மூலம் நடப்பு லீக் சாம்பியன்ஷிப் கிண்ணத்தை சொந்தமாக்கும் வாய்ப்பு கிட்டியது.

 

போட்டியின் ஆரம்பம் முதலே கடுமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய திரித்துவக் கல்லூரி, முதல் பாதி ஆட்டம் நிறைவடையும் போது 07-00 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றது.

 

வெற்றி பெற்ற திரித்துவக் கல்லூரி அணியினர் 2 ட்ரைகள் , 2 கன்வெர்ஷன்கள் மற்றும் 2 பெனால்டி உதைகளை வெற்றிகரமாக உதைத்து புள்ளிகளைப் பெற்றனர்.

 

இந்த லீக் சாம்பியன்ஷிப் கிண்ணத்திற்கு மேலதிகமாக, 15 ஆண்டுகளுக்குப் பிறகு இம்முறை ஜனாதிபதி கிண்ண பாடசாலைகளுக்கு இடையிலான ரக்பி தொடரின் சாம்பியன் பட்டத்தையும் திரித்துவக் கல்லூரி வென்றுள்ளது.

 

அதற்கமைய, இம்முறை பாடசாலை ரக்பி மைதானத்தில் இரட்டைக் கிரீடங்களை வெல்லும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்துள்ளது.

 

இம்முறை போட்டித் தொடரின் இரண்டாம் இடத்தை மருதானை சாஹிரா கல்லூரியும், மூன்றாம் இடத்தை புனித பேதுரு கல்லூரியும் பெற்றுக்கொண்டன.


MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!