Header Logo

செய்திகள்
2026 இல் ரூபாய் பெறுமதி 8 சதவீதம் வீழ்ச்சி

Jun 28, 2026 - 04:10 PM -

0

2026 இல் ரூபாய் பெறுமதி 8 சதவீதம் வீழ்ச்சி

2026 ஆம் ஆண்டில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 8 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது. 

மத்திய வங்கியின் தரவுகளின்படி, வெள்ளிக்கிழமை (26) வர்த்தக முடிவில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 332.22 ரூபாயாகவும், விற்பனை விலை 341.87 ரூபாயாகவும் காணப்பட்டது. 

இலங்கை ரூபாயின் தற்போதைய பெறுமதி வீழ்ச்சியானது, 2022 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடுமையான வீழ்ச்சியிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க கடந்த மாதம் தெரிவித்திருந்தார். 

ஏனெனில், இம்முறை வீழ்ச்சியானது உள்நாட்டு தவறான நிர்வாகத்தினால் அல்லாமல், உலகளாவிய சூழ்நிலைகளால் உந்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

2022 மார்ச்-ஏப்ரல் காலப்பகுதியில், ஏனைய பிராந்திய நாணயங்கள் ஸ்திரமாக இருந்தபோது, உள்நாட்டு காரணிகளினால் மட்டுமே ரூபாயின் மதிப்பு 370 ரூபாய் வரை வீழ்ச்சியடைந்ததாக அவர் சுட்டிக்காட்டினார். 

இருப்பினும், தற்போதைய நிலையில் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் அமெரிக்க டொலர் வலுவடைந்து வருவதால், பிராந்திய நாடுகளிலும் நாணய பெறுமதி வீழ்ச்சி ஏற்பட்டு வருகிறது.


MOST READ

காணொளி
தேர்தலுக்கு அஞ்சினால் ஆட்சி நீடிக்காது - சுமந்திரன்

தேர்தலுக்கு அஞ்சினால் ஆட்சி நீடிக்காது - சுமந்திரன்

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!