Header Logo

சினிமா
பாகம் - 2க்கு தயாராகும் மா இன்ட்டி பங்காரம்

Jun 29, 2026 - 11:02 AM -

0

பாகம் - 2க்கு தயாராகும் மா இன்ட்டி பங்காரம்

தெலுங்கில் நடிகை சமந்தா நடிப்பில், ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில் "மா இன்ட்டி பங்காரம்" திரைப்படம் வெளியானது. 

நந்தினி ரெட்டி இப்படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகியை மையப்படுத்தி உருவான இந்தப் படத்தை சமந்தாவுடன் சேர்ந்து அவரது கணவரான ராஜ் நிடிமொரு தயாரித்திருந்தார். 

1980களின் பின்னணியில் ஒரு பெண்ணின் உணர்ச்சிகரமான வாழ்க்கை போராட்டத்தைச் சொல்லும் விதமாக இந்தப் படம் உருவாகியிருந்தது. தற்போது இந்தப் படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று சுமார் 60 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. 

இந்த வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் வெற்றி விழாவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து தயாரிப்பாளர் ராஜ் நிடிமொரு கூறும்போது, "முதல் பாகத்தை விட இந்த இரண்டாம் பாகம் இரு மடங்கு அதிக மகிழ்ச்சியையும் விறுவிறுப்பையும் தரும். 

இதற்கான கதைக்கரு ஏற்கனவே தயார் நிலையில் இருக்கிறது. முதல் பாகத்தில் பணியாற்றிய அதே குழுவினரே இந்தப் படத்திலும் பணியாற்றுவார்கள் என்றும் கூறியுள்ளார்.


MOST READ

காணொளி
இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!

தமிழில் உரையாற்றிய அமைச்சர்!

தமிழில் உரையாற்றிய அமைச்சர்!

தேர்தலுக்கு அஞ்சினால் ஆட்சி நீடிக்காது - சுமந்திரன்

தேர்தலுக்கு அஞ்சினால் ஆட்சி நீடிக்காது - சுமந்திரன்

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!