Jun 29, 2026 - 04:23 PM -
0
பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 7,000க்கும் அதிகமான தன்சல்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாடு முழுவதும் 7,215 தன்சல்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அங்கு காணப்பட்ட குறைபாடுகள் காரணமாக, அவற்றை நிவர்த்தி செய்து தொடர்ந்து நடத்துவதற்கு 131 தன்சல்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், தரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டிருந்த 04 குளிர்பான தன்சல்களை தடை செய்வதற்கும் பொது சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பொசன் பூரணையை முன்னிட்டு நாடு முழுவதும் 18,412 தன்சல்கள் பதிவு செய்யப்பட்டிருந்ததோடு, இன்றும் நாளையும் நடத்தப்படும் அந்த தன்சல்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
அத்துடன், பொசன் வலயங்களைச் சூழவுள்ள கடைகள் மற்றும் தற்காலிக பொசன் கடைகளும் இந்த பொசன் வாரத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

