Jul 10, 2026 - 03:25 PM -
0
களுத்துறை மாவட்டத்தில் டெங்கு நுளம்பு குடம்பிகள் பெருகுவதாகக் கண்டறியப்பட்ட பின்வத்தை, வாதுவை மற்றும் மொல்லிகொட பொது சுகாதார பரிசோதகர் பிரிவுகளை மையமாகக் கொண்டு, இன்று (10) விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
வாதுவை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, இலங்கை விமானப்படையின் ட்ரோன் பிரிவுக்குச் சொந்தமான ட்ரோன் கமரா தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.
இதன்போது, பொது சுகாதார பரிசோதகர்கள் சாதாரண முறையில் சென்றடைய முடியாத உயரமான கட்டிடங்கள் மற்றும் கூரைகளின் மீது டெங்கு நுளம்பு குடம்பிகள் பெருகும் இடங்கள் உள்ளனவா என்பது ட்ரோன் கமராவின் உதவியுடன் கண்காணிக்கப்பட்டது.
வாதுவை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கலிகா பெர்னாண்டோவின் ஆலோசனையின் பேரில், பிரதான பொது சுகாதார பரிசோதகர் எஸ். எம். எஸ். சஞ்சீவ உள்ளிட்ட பல பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் விமானப்படை அதிகாரிகள் இணைந்து இந்த கூட்டு நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டனர்.
