Header Logo
Mogo Academy

செய்திகள்
நீர்கொழும்பு சிறை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

Jul 10, 2026 - 08:19 PM -

0

நீர்கொழும்பு சிறை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
Mobitel inner

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 8 அதிகாரிகளுக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் பதவி உயர்வு வழங்கியுள்ளது. 

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற துயரச் சம்பவத்தில் 8 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 21 கைதிகள் உயிரிழந்தனர். 

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

அதற்கமைய, நீர்கொழும்பு மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளிடம் வாக்குமூலங்களைப் பெறும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் அதிகாரிகள் மற்றும் கைதிகள் என 29 பேரிடம் இதுவரை வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

அவர்களில் உள்ள அனைத்துக் கைதிகளும் கட்டுவெல்லேகம சுரேஷின் தரப்பினரால் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சிறைச்சாலை அதிகாரிகளிடமும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

இருப்பினும் அந்தப் பணியை முழுமையாக நிறைவு செய்ய முடியவில்லை. 

சில அதிகாரிகள் வாக்குமூலம் அளிப்பதற்குப் போதுமான ஆரோக்கியமான நிலையில் இல்லாததே இதற்குக் காரணமாகும். 

இதனிடையே, மோதலில் உயிரிழந்த 8 சிறைச்சாலை அதிகாரிகளுக்குப் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. 

கொல்லப்பட்ட இரண்டாம் நிலை சிறைச்சாலை அதிகாரி எஸ்.எச்.எஸ். சந்திரவன்ச முதல் நிலை சிறைச்சாலை அதிகாரியாகவும், ஏனைய காவலர்கள் சார்ஜன்ட் பதவிகளுக்கும் உயர்த்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் இருந்த அனைத்துக் கைதிகளும் இன்று வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர். 

சிறைச்சாலை மோதலில் பலத்த காயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த சார்ஜன்ட் கமகே உபாலியின் உடல், இன்று கம்புறுபிட்டியவில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. 

இந்த மோதலில் உயிரிழந்த சார்ஜன்ட் ருவன் திலகசிறியின் இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் அம்பகஹவெவ பொது மயானத்தில் நடைபெற்றன.


MOST READ

காணொளி
உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த  நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

இது மிகவும் மோசமான செயல்!

இது மிகவும் மோசமான செயல்!

Mobitel Upahara