Header Logo
Mogo Academy

செய்திகள்
ஜூனில் வௌிநாட்டு தொழிலாளர் பணவணுப்பல் வருவாய் வீழ்ச்சி

Jul 11, 2026 - 05:58 AM -

0

ஜூனில் வௌிநாட்டு தொழிலாளர் பணவணுப்பல் வருவாய் வீழ்ச்சி
Mobitel inner

வௌிநாட்டு தொழிலாளர் பணவணுப்பல்கள் மூலம் இலங்கை கடந்த ஜூன் மாதத்தில் 695 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருவாயாகப் பெற்றுள்ளது. 

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரங்களில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. 

கடந்த மே மாதத்தில் பெறப்பட்ட வெளிநாட்டு வருவாய் 847 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. 

இதன்படி, மே மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மாதத்தில் வெளிநாட்டு பணவணுப்பல்கள் மூலம் பெறப்பட்ட வருவாயானது 152 மில்லியன் அமெரிக்க டொலர்களினால் கணிசமாகக் குறைந்துள்ளது. 

இதேவேளை, 2026 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில் வௌிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களால் நாட்டிற்கு அனுப்பப்பட்ட வெளிநாட்டு வருவாய் 4.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 

எவ்வாறாயினும் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 23.2 சதவீத அதிகரிப்பைக் காட்டுகிறது என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகிறது. 

அதேநேரம், 2026 ஜூன் மாதத்தில் இலங்கை சுற்றுலாத்துறை மூலம் 151.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருவாயாக ஈட்டியுள்ளது என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. 

இருப்பினும், மத்திய வங்கியின் தரவுகளின்படி, 2025 ஜூன் மாதத்திற்கான சுற்றுலா வருவாய் 169.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த  நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

Mobitel Upahara