Header Logo
Mogo Academy

இந்தியா
மாணவனை மது வாங்க அனுப்பிய ஆசிரியர் கைது!

Jul 11, 2026 - 07:24 AM -

0

மாணவனை மது வாங்க அனுப்பிய ஆசிரியர் கைது!
Mobitel inner

குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில், பாடசாலை நேரத்தில் மாணவன் ஒருவனை மதுபானம் வாங்க அனுப்பியதாகக் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டின் பேரில், தொடக்கப் பாடசாலை ஆசிரியை இடைநீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார் என்று மாநில கல்வி அமைச்சர் தெரிவித்தார். 

உனா தாலுக்காவில் உள்ள கபத் கிராமத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இது ஜூன் 20 ஆம் திகதியன்று காலை சுமார் 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது. 

கல்வி அமைச்சர் பிரத்யுமன் வாஜா, இந்த விவகாரம் தீவிரமாக கையாளப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறினார். குஜராத்தில் மதுபானம் தயாரித்தல், விற்பனை செய்தல் மற்றும் அருந்துதல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன. 

சம்பந்தப்பட்ட ஆசிரியர் தற்போது விசாரணையில் உள்ளார், மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

காணொளி செய்தி ஒன்றில் அமைச்சர் தெரிவிக்கையில், "கிர் சோம்நாத் மாவட்டம், உனா தாலுக்காவில் உள்ள கபத் என்ற இடத்தில், ஆசிரியர் மாணவனை மதுபானம் வாங்க அனுப்பிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 

இந்த விவகாரத்தை மிகுந்த தீவிரமாக கையாண்டு, சம்பந்தப்பட்ட ஆசிரியரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டேன். அதனைத் தொடர்ந்து, மாவட்ட அலுவலர் தாமதமின்றி அவரைப் பணியிடை நீக்கம் செய்தார்" என்று கூறினார். 

பாடசாலை அதிபர் அளித்த புகாரின் அடிப்படையில், ஆசிரியர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, உனா காவல் துறையினரால் அவர் கைது செய்யப்பட்டார் என்று வாஜா கூறினார். குற்றம் சாட்டப்பட்ட ஹரேஷ்கிரி குலாப்கிரி கோஸ்வாமி, 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கற்பித்து வந்தார். 

முதல் தகவல் அறிக்கையின்படி, கோஸ்வாமி 7 ஆம் வகுப்பு மாணவன் ஒருவனிடம் 20 ரூபாய் கொடுத்து ஆசை காட்டி, பின்னர் ஒரு பாட்டில் மதுபானம் கொண்டு வருவதாக 500 ரூபாய் கொடுத்துள்ளார். பின்னர் பள்ளி முதல்வர் இந்த சம்பவம் குறித்து தொடக்க கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவித்தார்.


MOST READ

காணொளி
நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த  நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

Mobitel Upahara