Header Logo
SLIC
பல்சுவை
முடி கொட்டுவதை நிறுத்தி அதிகமாக வளரவைக்கும் ‘வெந்தயம்’!

Jul 11, 2026 - 08:29 AM

முடி கொட்டுவதை நிறுத்தி அதிகமாக வளரவைக்கும் ‘வெந்தயம்’!
Mobitel Inner 1278
EDEX Inner

வெந்தயம் சமையலுக்கு மட்டுமல்ல, கூந்தல் அழகிற்கும் ஆரோக்கியத்திற்கும் நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஒரு மிகச்சிறந்த இயற்கையான ரகசியம். 

இன்றைய காலகட்டத்தில் மாசடைந்த சுற்றுச்சுழல் மற்றும் மனம் அழுத்தம் காரணமாக பலருக்கும் முடி கொட்டுதல், பொடுகு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதற்கு வெந்தயம் நிச்சயமாக ஒரு சிறந்த தீர்வாக அமையும். 

வெந்தயத்தை தாராளமாக தலைக்கு பயன்படுத்தலாம். வெந்தயத்தில் அதிக அளவில் புரோட்டீன் மற்றும் நிக்கோடினிக் அமிலம் நிறைந்துள்ளன. இவை முடியின் வேர்கால்களைப் பலப்படுத்தி, முடி உதிர்வதை உடனடியாகத் தடுக்கின்றன. 

மேலும், இதில் உள்ள லெசித்தின் என்றவை தலைமுடிக்கு இயற்கையான பளபளப்பையும், கண்டிஷனர் போன்ற மென்மையையும் தருகிறது. 

இரவில் தேவையான அளவு வெந்தயத்தை ஊற வைத்து விட்டு, காலையில் ஊற வைத்த வெந்தயத்துடன் ஒரு கைப்பிடி அளவு பிரெஷ் கருவேப்பிலையை சேர்த்து பேஸ்ட் போல அரைத்துக்கொள்ள வேண்டும். 

இந்த கலவையை வாரத்திற்கு ஒரு முறை தலையில் தடவி வந்தால், தலையில் இருக்கும் இளநரை மறைந்து முடி கருகருவென மாறும். 

நாம் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெயை மிதமாக சூடாக்கி, அதில் இரண்டு ஸ்பூன் ஊற வைக்காத வெந்தயத்தை போட்டு அது சிவக்கும் வரைக்கும் காய்ச்ச வேண்டும். 

இந்த எண்ணெயை வாரம் இரண்டு முறை தலையில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்து வந்தால், கூந்தல் நீளமாகவும் ஆரோக்கியமாகவும் வளரும். 

இரவில் தூங்குவதற்கு முன்பு தேவையான அளவு வெந்தயத்தை அளவான தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் ஊற வைத்த தண்ணீர் மற்றும் வெந்தயத்தையும் சேர்த்து நன்றாக அரைத்து விட்டு, அதனுடன் 2 ஸ்பூன் புளித்த தயிர் சேர்த்து கலக்க வேண்டும். 

இந்த பேக்கை காலையில் தலையின் வேர்க்கால்களில் நன்றாக தடவி 20 முதல் 30 நிமிடங்கள் வரை ஊற வைத்துவிட்டு பிறகு மென்மையான ஷாம்பு கொண்டு தலையை அலச வேண்டும். இப்படி செய்து வந்தால் தலையில் இருக்கும் பொடுகு அடியோடு நீங்கும். 

வெந்தயத்தை ஊற வைத்த தண்ணீரை வீணாக்காமல் அதனை வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள். 

தலையில் ஷாம்பு போட்டு குளித்து முடித்த பிறகு, கடைசியாக வெந்தயம் ஊற வைத்த தண்ணீரை கொண்டு 5 நிமிடம் மசாஜ் செய்து விட்டு தலையை அலசினால் முடி வறண்ட மாதிரி இல்லாமல் பட்டுப் போன்று மிருதுவாக இருக்கும். 

வெந்தயம் இயற்கையிலேயே மிகக் கடுமையான குளிர்ச்சித் தன்மை கொண்டது. 

உங்களுக்கு சைனஸ், சளி, இருமல் அல்லது ஆஸ்துமா போன்ற பிரச்சினைகள் இருந்தால் வெந்தயத்தை தலைக்கு பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் அல்லது 10 நிமிடங்களுக்கு மேல் தலையில் வைக்க வேண்டாம். 

சாதாரண மக்கள் இந்த ஹேர் பேக்குகளை 20 முதல் 30 நிமிடங்களுக்கு மேல் தலையில் ஊற வைக்கக் கூடாது.


MOST READ
09
“ஓர் அணி ஒரே நோக்கம்’ என்ற தொனிப்பொருளிலான 2025 வருடாந்த விற்பனை சிறப்பு விருதைக் கொண்டாடிய ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் நிறுவனம்

“ஓர் அணி ஒரே நோக்கம்’ என்ற தொனிப்பொருளிலான 2025 வருடாந்த விற்பனை சிறப்பு விருதைக் கொண்டாடிய ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் நிறுவனம்

Aug 25, 2026 - 05:45 PM


காணொளி
மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

Mobitel 1278