Header Logo
Mogo Academy

பல்சுவை
காலை வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை குடித்து பாருங்கள்!

Jul 11, 2026 - 09:26 AM -

0

காலை வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை குடித்து பாருங்கள்!
Mobitel inner

இந்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பதால் தொப்பை கொழுப்பை எரிக்கவும், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. 

நம்மில் பலருக்கு, உடல் எடையைக் குறைப்பதை விட தொப்பைக் கொழுப்பைக் கரைப்பதே இலக்காக இருக்கிறது. ஆனால், தொப்பைக் கொழுப்பை எப்படிக் கரைப்பது என்பதில் பலருக்கு குழப்பம் உள்ளது. நீங்களும் தொப்பை கொழுப்பை கரைக்க முயற்சி செய்து, என்ன செய்தாலும் நல்ல பலன் கிடைக்கவில்லை என்றால் இந்த குறிப்புகள் உங்களுக்கானவை தான். 

காலையில் எழுந்தவுடன் ஒரு பானத்தை குடிப்பதன் மூலம் கொழுப்பு அல்லது தொப்பை கொழுப்பு கரைவதை எளிதாகக் காணலாம். ஏனெனில் இது உங்கள் உடலின் நீரேற்றம், செரிமானம், வளர்சிதை மாற்றம் மற்றும் பிடிவாதமான கொழுப்பை கரைப்பதில் திறம்பட செயல்படுகிறது. அப்படியென்றால் அந்த பானம் என்னவென்று இங்கே பார்ப்போம். 

நம் சமையலறையில் எளிதாகக் கிடைக்கக்கூடிய சீரகத்தைப் பயன்படுத்தி இந்தப் பானத்தை எளிதாகத் தயாரிக்கலாம். ஒரு தேக்கரண்டி சீரகத்தை ஒரு குவளை தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் அதை மெதுவாகக் கொதிக்க வைத்து வடிகட்டி, வெறும் வயிற்றில் வெதுவெதுப்பாகப் பருகவும். 

இந்த பானம் எப்படி தொப்பையை குறைக்கிறது.?: சீரகம் உடலில் இருந்து நச்சுகளை நீக்குகிறது, செரிமான நொதிகளைத் தூண்டுகிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தை மிக விரைவாக அதிகரிக்கிறது. இது அடிவயிற்றுப் பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்பை எரிக்க உதவுகிறது மற்றும் காலை வீக்கத்தைக் குறைக்கிறது. 

சீரக நீர் ஏன் நல்லது.?, கிரீன் டீ போன்ற பானங்களை வெறும் வயிற்றில் குடித்தால் அசிடிட்டி ஏற்படும் என்று சிலர் கவலைப்படுகிறார்கள். ஆனால் சீரக நீர் வெறும் வயிற்றில் குடிக்க நல்ல பானம், ஏனெனில் இது வயிற்றை குளிர்வித்து செரிமானத்தை மேம்படுத்துகிறது. ஒரு டீஸ்பூன் சீரகத்தில் 8 கலோரிகள் மட்டுமே இருப்பதால் சீரக நீர் குறைந்த கலோரி, குடலுக்கு ஏற்ற பானமாகும். 

எடை இழப்புக்கு சீரக நீர் எவ்வாறு உதவுகிறது.?, சீரகம் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. உடலில் இன்சுலின் அளவு சீராக இருக்கும்போது ​​​​உடல் குறைந்த கொழுப்பைச் சேமித்து எடையை எளிதாக்குகிறது. 

இந்தத் தண்ணீரை யார் குடிக்கக் கூடாது.?, சீரகத் தண்ணீருக்கு இரத்தச் சர்க்கரை அளவை வேகமாக குறைக்கும் தன்மை இருப்பதால், நீரிழிவு நோய்க்காக மாத்திரைகள் உட்கொள்பவர்கள் இதை எச்சரிக்கையுடன் குடிக்க வேண்டும். மேலும், இது இரத்தம் உறைவதைத் தாமதப்படுத்துவதால் அறுவை சிகிச்சைக்கு உட்படுபவர்கள் குறைந்தது 2 வாரங்களுக்கு முன்பே இதை உட்கொள்வதை நிறுத்த வேண்டும். 

இதேபோல், கர்ப்பிணிப் பெண்களுக்கு கருப்பைச் சுருக்கத்தை ஏற்படுத்தும். சிலருக்கு, பித்தத்தை தூண்டி கடுமையான அமிலத்தன்மை மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்படலாம். எனவே, கர்ப்பிணிகள் மற்றும் நெஞ்செரிச்சல் பிரச்சனை உள்ளவர்கள் இந்த சீரக நீரை எச்சரிக்கையுடன் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு குடிக்கலாம். 

அதேபோல், பாலூட்டும் தாய்மார்களும் கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் சீரகத் தண்ணீர் தாய்ப்பால் சுரப்பைக் குறைக்கும். எனவே, எந்தவித உடல்நலப் பிரச்சினைகளும் இல்லாதவர்கள் கூட ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ் என்ற அளவில் மிதமாக அருந்துவது பாதுகாப்பானது. 

சீரகத் தண்ணீர் குடிப்பதோடு மட்டுமல்லாமல் தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்ற கார்டியோ உடற்பயிற்சிகளையும் செய்யுங்கள். வெள்ளைச் சர்க்கரை, மாவு, பொரித்த உணவுகள் மற்றும் துரித உணவுகளை முற்றிலுமாகத் தவிர்க்கவும். அதற்குப் பதிலாக நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள், முட்டைகள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற புரதம் நிறைந்த உணவுகளை அதிகமாக உண்ணுங்கள். 

இதனுடன், தினமும் 7 முதல் 8 மணிநேரம் தூங்குவது, மன அழுத்தத்தைக் குறைப்பது மற்றும் ஒரு நாளைக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீரைக் குடிப்பது ஆகியவை ஹார்மோன் சமநிலையை சீராக்கவும், தொப்பை கொழுப்பை விரைவாக எரிக்கவும் உதவும்.


MOST READ

காணொளி
நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த  நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

Mobitel Upahara