Jul 11, 2026 - 09:46 PM -
0
மத்துகம, நேபொட பகுதியில் உள்ள வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இன்று (11) மாலை வந்த குழுவொன்றினால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
T-56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், இந்தச் சம்பவத்தில் எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை எனவும், சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
