Jul 18, 2026 - 11:09 PM -
0
ஹிரண பகுதியில் 18 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் (CID) இன்று (18) பிற்பகல் இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பாணந்துறை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
