Jul 20, 2026 - 10:39 AM -
0
ஹபராதுவ யத்தெஹிமுல்ல பகுதியில் ஹெரோயின், ஐஸ் மற்றும் போதை மாத்திரைகளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹபராதுவ பொலிஸ் நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் வசம் இருந்து 112 கிராம் 260 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 29 கிராம் 700 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் அடையாளம் காணப்படாத 500 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
32 வயதுடைய குறித்த சந்தேகநபர் உனவட்டுனை, ஹீனட்டியன பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், சம்பவம் தொடர்பில் ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
