Header Logo
Mogo Academy

செய்திகள்
மட்டு நீதிமன்ற சிறைக்கூடத்தில் கைதி ஒருவர் உயிரை மாய்க்க முயற்சி

Jul 20, 2026 - 09:35 PM -

0

மட்டு நீதிமன்ற சிறைக்கூடத்தில் கைதி ஒருவர் உயிரை மாய்க்க முயற்சி
Mobitel inner

மட்டக்களப்பில் பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கைதியொருவர், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற சிறைக்கூட்டினுள் பிளேடால் தனது கழுத்து மற்றும் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் இன்று (20) பிற்பகல் 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

படுகாயமடைந்த அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான புகையிரத நிலையத்திற்கு முன்னாலுள்ள கடையொன்றில் 16,000 ரூபா பணம் திருடியமை மற்றும் மற்றுமொரு கடையை உடைத்து திருடியமை உள்ளிட்ட மூன்று திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக குறித்த நபர் கடந்த வருடம் கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்திருந்தார். 

பிணையில் சென்ற அவர், வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் சமூகமளிக்காமல் தலைமறைவாகியிருந்தமையால் அவருக்கு எதிராக நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. அதற்கமைய, கடந்த 13 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வைத்து யாழ் பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டார். 

பின்னர் கடந்த 15 ஆம் திகதி மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரை இன்று (20) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதற்கிணங்க மட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். 

வழக்கு விசாரணைக்காக இன்று காலையில் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட அவர், நீதிமன்ற சிறைக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து திறந்த நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட போது, வழக்கை விசாரித்த நீதவான் அவரை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை மேலும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். 

இந்த உத்தரவைத் தொடர்ந்து அவர் மீண்டும் நீதிமன்ற சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டார். திறந்த நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், பிற்பகல் 3.00 மணியளவில் அங்கிருந்த மலசல கூடத்திற்குள் சென்ற குறித்த கைதி, சவரப் பிளேடால் தனது கழுத்தையும் கையையும் அறுத்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். 

இதில் படுகாயமடைந்த அவர் உடனடியாக மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். தற்கொலைக்கு முயன்ற நபர் யாழ்ப்பாணம், காங்கேசன்துறை தையிட்டி பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

இவருக்கு எதிராக மட்டக்களப்பில் மூன்று திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸ் பிரிவினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.

--


MOST READ

காணொளி
மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

Mobitel Upahara