Header Logo
Mogo Academy

செய்திகள்
டெங்கு காய்ச்சல் இன்னமும் ஆபத்தான நிலையில் உள்ளது - அமைச்சர் நலிந்த

Jul 21, 2026 - 05:14 PM -

0

டெங்கு காய்ச்சல் இன்னமும் ஆபத்தான நிலையில் உள்ளது - அமைச்சர் நலிந்த
Mobitel inner

அடுத்த மூன்று வார காலத்திற்கு டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

 

தற்போது டெங்கு நோய் பரவுவது ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், ஓகஸ்ட் மாதத்தின் நடுப்பகுதி வரை இந்நிலைமை ஆபத்தான மட்டத்திலேயே இருக்கும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 

3 மாவட்டங்களைத் தவிர ஏனைய மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், சுற்றியுள்ள பகுதிகளைச் சுத்தம் செய்யும் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுப்பது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

 

டெங்குவைக் கட்டுப்படுத்துவதற்காக அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

"டெங்கு என்பது ஒரே நாளில் அனைவரும் வீதியில் இறங்கித் தீர்க்கக்கூடிய பிரச்சினையல்ல. நிலவும் மழைக்கால சூழ்நிலையால் கொசுக்கள் உருவாகும் வாய்ப்புகள் அதிகம். வீடுகளில் நாம் கவனிக்காத இடங்களில் கூட கொசுக்கள் உற்பத்தியாகலாம். 

 

அதனால், சுத்தம் செய்யும் பணிகளைத் தொடர்ச்சியாகச் செய்ய வேண்டும். கொழும்பு மாவட்டம் உட்பட பல பகுதிகளில் பொதுமக்களின் பங்களிப்புடன் நோயாளர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. 

 

இருப்பினும், விழிப்புணர்வை கைவிடக் கூடாது. அடுத்த 3 வாரங்களுக்கு இந்த அபாயம் நீடிப்பதால், பகுதிகளைச் சுத்தம் செய்து, சுகாதார பரிசோதகர்களின் (PHI / MOH) உதவியுடன் புகையூட்டல் (Fogging) நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்."


MOST READ

காணொளி
பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ முன்வந்துள்ள ‘நூல்’ அமைப்பு!

பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ முன்வந்துள்ள ‘நூல்’ அமைப்பு!

இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!

இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!

செம்மணியில் போராட்டக்காரர்களை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

செம்மணியில் போராட்டக்காரர்களை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

செம்மணியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

செம்மணியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

Mobitel Upahara