Jul 22, 2026 - 12:07 PM -
0
அரசுப் பணத்தைத் தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக உள்ள அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (22) மீண்டும் பிடியாணை பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாகச் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று எதிர்வரும் டிசம்பர் மாதம் 09 ஆம் திகதி நீதிமன்றத்தில் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசந்த அமரசேன, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.
