Jul 23, 2026 - 06:53 AM -
0
எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் இடையில் இன்று (23) விசேட கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.
இந்த விசேட கூட்டமானது இன்று பிற்பகலில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்போது, நீதி அமைச்சருக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான ஆதரவை பெறுவது மற்றும் தற்போதைய அரசியல் நகர்வு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
