Jul 23, 2026 - 02:26 PM -
0
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்காடு பகுதியில் நேற்றிரவு 11.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், மாங்காடு கிராமத்தைச் சேர்ந்த 51 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் மாங்காடு பகுதியில், மோட்டார் சைக்கிளும் துவிச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவரே உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைக் களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
--
