Header Logo
Mogo Academy

செய்திகள்
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆரம்பமாகும் தேவிநுவர எசல பெரஹரா

Jul 23, 2026 - 05:25 PM -

0

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆரம்பமாகும் தேவிநுவர எசல பெரஹரா
Mobitel inner

தேவிநுவர உத்பலவண்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்திர எசல பெரஹராவுக்காக 650 பொலிஸ் அதிகாரிகளும், 100 பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகப் பொலிசார் தெரிவித்துள்ளனர். 

இதற்கு மேலதிகமாக, புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும் பாதுகாப்புக் கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

கந்தர பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள தேவிநுவர உத்பலவண்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்திர எசல பெரஹராவின் முதல் பெரஹரா இன்று (23) ஆரம்பமாவதுடன், ஜூலை 29ஆம் திகதி மகா பெரஹரா இடம்பெற்றதன் பின்னர் அது நிறைவடையும். 

காவடிப் பெரஹரா ஜூலை 28ஆம் திகதியும், ரந்தொலிப் பெரஹரா ஜூலை 29ஆம் திகதியும் நடத்தப்படவுள்ளதாகப் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். 

அந்நாட்களில் பிற்பகல் 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை கொழும்பு - கதிர்காமம் பிரதான வீதியில் வாகன நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால், மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிசார் சாரதிகளிடம் கேட்டுக்கொள்கின்றனர். 

அதற்கமைய, மாத்தறையிலிருந்து தங்காலை நோக்கிச் செல்லும் வாகனங்கள் மத்தேவத்தை தொழிற்பயிற்சி நிலையத்திற்கு அருகில் மாத்தறை - யட்டியன வீதிக்கு வந்து, கெக்கனதுர சந்ததியிலிருந்து வேஹல்ல வீதி ஊடாக திக்வெல்ல வரை பயணிக்கலாம். 

தங்காலையிலிருந்து மாத்தறை நோக்கிச் செல்லும் வாகனங்கள் தலல்ல தொழிற்பயிற்சி நிலையத்திற்கு அருகில் திரும்பி, நாவொட்டுன்ன வீதி ஊடாக வியன்னருவ சந்தி வரை சென்று, திக்வெல்ல - வேஹல்ல வீதி ஊடாக கெக்கனதுர சந்திக்கு வந்து கெக்கனதுர - மாத்தறை வீதி ஊடாக மாத்தறை வரை பயணிக்கலாம். 

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெருமளவான பக்தர்கள் பெரஹராவைக் காண வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்களின் மற்றும் சொத்துக்களின் பாதுகாப்பு மற்றும் வாகனங்களைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தப் பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.


MOST READ

காணொளி
யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

அடைக்கலநாதன் கோரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

வடமாகாணம் சுற்றுலாத்துறையில் மிகவும் பின்தங்கியுள்ளது!

வடமாகாணம் சுற்றுலாத்துறையில் மிகவும் பின்தங்கியுள்ளது!

செம்மணியின் 40 ஆவது நாளில் மேலும் 4 என்புகூடுகள் அடையாளம்!

செம்மணியின் 40 ஆவது நாளில் மேலும் 4 என்புகூடுகள் அடையாளம்!

பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ முன்வந்துள்ள ‘நூல்’ அமைப்பு!

பொருளாதார மேம்பாட்டிற்கு உதவ முன்வந்துள்ள ‘நூல்’ அமைப்பு!

இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!

இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!

செம்மணியில் போராட்டக்காரர்களை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

செம்மணியில் போராட்டக்காரர்களை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

Mobitel Upahara