Header Logo
செய்திகள்
மட்டக்களப்பில் ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் இருவர் கைது!

Jul 31, 2026 - 07:15 AM

மட்டக்களப்பில் ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் இருவர் கைது!
Mobitel inner

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட போதைப்பொருள் வியாபாரியைப் பார்வையிடுவதற்காக, கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்குச் சென்று உணவகம் ஒன்றில் தங்கியிருந்த இருவரை ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் நேற்று முன்தினம் (29) இரவு கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

 

கைது செய்யப்பட்டவர்கள் தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த, சிறையிலுள்ள போதைப்பொருள் வியாபாரியின் சகோதரர் மற்றும் அவரது நண்பர் ஆவர்.

 

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:

 

கடந்த ஏப்ரல் 7-ஆம் திகதி 7.5 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி, நீர்கொழும்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார்.

 

இந்நிலையில், குறித்த சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட படுகொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கிருந்து அந்தப் போதைப்பொருள் வியாபாரி உட்பட 60 கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்.

 

இதனையடுத்து, சிறையிலுள்ள சகோதரனைப் பார்வையிடுவதற்காக அவரது தம்பியும் நண்பரும் கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்குச் சென்று, கல்லடிப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் தங்கியிருந்துள்ளனர்.

 

இந்நிலையில், மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, பொலிஸ் நிலைய போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர், சம்பவத்தினமான புதன்கிழமை இரவு குறித்த உணவகத்தை முற்றுகையிட்டுச் சோதனை நடத்தினர்.

 

இதன்போது, அங்குள்ள அறையில் இருந்த தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 26 மற்றும் 31 வயதுடைய இருவரை 100 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருட்களுடன் பொலிஸார் கைது செய்தனர்.

 

கைது செய்யப்பட்டவர்களில் போதைப்பொருள் வியாபாரியின் சகோதரன், ஏற்கனவே போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் சிறையிலிருந்த பின்னரே நீதிமன்றப் பிணையில் அண்மையில் வெளிவந்துள்ளார். 

 

கைது செய்யப்பட்ட இருவருமே போதைப்பொருள் வியாபாரிகள் என்றும், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


MOST READ

காணொளி
மக்களுக்கு நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவையுள்ளது!

மக்களுக்கு நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவையுள்ளது!

ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்

ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்

செம்மணியில் நீதி கோரிய அமைதி வழி போராட்டம்!

செம்மணியில் நீதி கோரிய அமைதி வழி போராட்டம்!

நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

Mobitel Upahara