Header Logo
SLIC
Rhythams of Lanka
செய்திகள்
ஜனாதிபதி பொதுமன்னிப்பு: முறையான பொறிமுறை அறிக்கை விரைவில் அமைச்சரவைக்கு

Aug 22, 2026 - 10:43 AM

ஜனாதிபதி பொதுமன்னிப்பு: முறையான பொறிமுறை அறிக்கை விரைவில் அமைச்சரவைக்கு
Mobitel Inner 1278
EDEX Inner

தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்காக முறையான பொறிமுறை ஒன்றை உருவாக்குவது தொடர்பில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். 

கொழும்பு விளக்கமறியல், புதிய மகசின் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளின் செயற்பாடுகளைப் பார்வையிட்டு, பெண் மற்றும் ஆண் கைதிகளின் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். 

மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்கான முறையான பொறிமுறையைத் தயாரிக்கும் நோக்கில், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. 

பத்து மாத காலத்திற்குள்ளான ஆய்வுக்குப் பின்னர் குறித்த குழுவின் அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் அங்கு தெரிவித்தார். 

ஜனாதிபதி பொதுமன்னிப்பை வழங்குவதற்கான முறையான பொறிமுறையைத் தயாரித்தல், மரண தண்டனை அனுபவிக்கும் கைதிகளின் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தல், ஆயுள் தண்டனை அனுபவிக்கும் கைதிகளின் தண்டனைக் காலத்தை 20 ஆண்டுகளாகக் குறைத்தல் மற்றும் கைதிகளுக்கு வீட்டு விடுமுறை வழங்குதல் போன்ற விடயங்கள் தொடர்பில் குறித்த குழுவினால் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. 

இதன் மூலம் மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் விடுதலையாகிச் செல்வதற்கான முறையான பொதுமன்னிப்புப் பொறிமுறை ஒன்றை உருவாக்குவது தொடர்பான விடயங்கள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார். 

அரசாங்க பகுப்பாய்வு அறிக்கைகளின் தாமதம் காரணமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெண் மற்றும் ஆண் கைதிகளைச் சந்தித்த அமைச்சர், அந்த அறிக்கைகளைக் விரைவாக வழங்குவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.


MOST READ

காணொளி
இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

Mobitel 1278