Header Logo
SLIC
Rhythams of Lanka
இந்தியா
ஐபோன் கேட்டு அடம்பிடித்த மகன்: குடும்பமே பலியான சோகம்!

Aug 22, 2026 - 02:30 PM

ஐபோன் கேட்டு அடம்பிடித்த மகன்: குடும்பமே பலியான சோகம்!
Mobitel Inner 1278
EDEX Inner

புதிய ஐபோன் தொலைபேசியைப் பெற்றுத் தருமாறு கோரி ஆரம்பமான குடும்பத் தகராறு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொடூரமாக உயிரிழப்பதில் நிறைவடைந்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

 

மகாராஷ்டிரா மாநிலத்தின் சத்ரபதி சம்பாஜிநகர், சால்டா ஃபாடா பகுதியைச் சேர்ந்த ஓட்டுநரான முரளிதர் சாந்த்குடே (48) என்பவரது 19 வயது மகனான குணால் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 

குடும்பத்தின் வறுமை நிலை காரணமாகத் தந்தை போனை வாங்கித் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த குணால், அருகில் உள்ள சுமார் 500 அடி உயரமுள்ள கவ்டா மலைப் பகுதிக்குச் சென்று தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

 

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினரும், வாளுஜ் எம்பிசி பொலிஸாரும் மற்றும் கிராம மக்களும் மலையின் கீழே பாதுகாப்பு வலைகளை அமைத்து அவரைக் காப்பாற்ற தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். 

 

சுமார் 3 மணி நேரப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், தந்தை முரளிதர் மகனைச் சமாதானப்படுத்தி மீட்க அருகில் சென்றுள்ளார்.

 

அப்போது குணால் மலையிலிருந்து கீழே குதித்துள்ளார். அவரைக் காப்பாற்ற முயன்ற தந்தை முரளிதரும் நிலைதடுமாறி மகனுடன் சேர்த்து மலையிலிருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

 

கண்முன்னே கணவனும் மகனும் 500 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து பலியான கோரக் காட்சியைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய் சங்கீதா, கடுமையான மன உளைச்சலில் அதே இடத்தில் இருந்து மலையிலிருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.

 

நொடிப் பொழுதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

சடலங்களைக் கைப்பற்றிய பொலிஸார் பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதோடு, மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.


MOST READ

காணொளி
இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

Mobitel 1278