Header Logo
SLIC
பல்சுவை
குழந்தை பெற்றுக்கொண்டால் ரூபா 52 லட்சம்!

Aug 26, 2026 - 03:23 PM

குழந்தை பெற்றுக்கொண்டால் ரூபா 52 லட்சம்!
Mobitel Inner 1278
EDEX Inner

குறைந்து வரும் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ளும் பெற்றோருக்கு 52 லட்சம் ரூபா கொடுக்கப்படும் என சிங்கப்பூர் அரசு அறிவித்தது. 

சிங்கப்பூரில் மக்கள் தொகை எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகிறது. இதையடுத்து, குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

குறைந்து வரும் மக்கள் தொகை எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார். 

இந்நிலையில், குழந்தை பெற்றுக் கொள்ளும் பெற்றோருக்கு 52 லட்சம் ரூபா கொடுக்கப்படும் என சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக, சிங்கப்பூர் அரசின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது, 

சிங்கப்பூரில் அழகான குடும்பங்களை உருவாக்குவதற்கான சூழலை ஏற்படுத்த வேறு என்னவெல்லாம் செய்ய முடியும் என கலந்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 

கல்வி, அடிப்படை வசதிகள் குறித்த கவலைகளால் இளம் தம்பதிகள் குழந்தைப் பேற்றை தள்ளிப் போட்டு வருகின்றனர். 

சிலர் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்கிறார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தை பெற்றுக்கொள்ள பெரும்பாலானோர் விரும்புவதில்லை. 

ஆகஸ்ட் 23 ஆம் திகதி தேசிய நாளை (27) முன்னிட்டு பிரதமர் அளித்த பேட்டியில், நாடு குழந்தைப் பேற்றை அதிகரிக்க விரும்புகிறது என்ற தகவலை வெளியிட்டுள்ளார். 

2023 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமான குழந்தை பிறந்தால் ரொக்கப் பரிசு வழங்குவது தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, தற்போது குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிக்கு 52 லட்சம் ரூபா ரொக்கப் பரிசு வழங்கப்படும். இது அவர்களது 17 வயது வரை ஆண்டுதோறும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ரொக்கப் பரிசு திட்டம் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் திகதிக்குப் பிறகு பிறந்த குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும். 

அதுமட்டுமின்றி, குழந்தைகள் பராமரிப்பு செலவு, கல்விச் செலவுகளை குறைக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம் என தெரிவித்துள்ளது.


MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278