Header Logo
Vallibel FD
செய்திகள்
மட்டக்களப்பில் பால கட்டுமானக் குழியில் வீழ்ந்து 6 வயது சிறுவன் உயிரிழப்பு!

Sep 5, 2026 - 06:34 AM

மட்டக்களப்பில் பால கட்டுமானக் குழியில் வீழ்ந்து 6 வயது சிறுவன் உயிரிழப்பு!
Mobitel Inner 1278
EDEX Inner

மட்டக்களப்பு நெடியமடு பகுதியில் பாலம் அமைப்பதற்காக நீர் எடுக்கும் நோக்கில் தோண்டப்பட்ட பாதுகாப்பற்ற குழியில் தவறி விழுந்து 6 வயதுடைய சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

 

இத்துயரச் சம்பவம் நேற்று (04) பிற்பகல் 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்தனர்.

 

நெடியமடு பகுதியைச் சேர்ந்த 6 வயதுடைய நாகராசா நவதீப் என்ற சிறுவனே இச்சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.

 

ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள 6ம் கட்டை என அழைக்கப்படும் நெடியமடு பாடசாலைக்கு எதிர்ப்பக்கத்தில், உன்னிச்சைக் குளத்தில் இருந்து வயலுக்குச் செல்லும் ஆற்றின் குறுக்கே நீர்ப்பாசன திணைக்களத்தினால் பாலம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

பாலம் கட்டுமானப் பணிக்காகத் தண்ணீர் எடுப்பதற்காக குறித்த சிறுவனின் வீட்டு வேலிக்கு மிக அருகில் நீர்ப்பாசன திணைக்களம் ஒரு பாரிய குழியைத் தோண்டியுள்ளது.

 

அவ்வாறு குடியிருப்பு மற்றும் வேலிக்கு அருகில் பெரிய குழியைத் தோண்டியபோதிலும், அதற்கு எவ்வித பாதுகாப்பு நடவடிக்கைகளும் செய்யப்படாமல் அலட்சியமாக விடப்பட்டுள்ளது.

 

சம்பவ தினத்தன்று பகல் 11.00 மணியளவில் சிறுவன் தன் வீட்டின் வேலிக்கு அருகாமையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அக்குழியில் தவறி விழுந்துள்ளான்.

 

குழியில் விழுந்த சிறுவனை உடனடியாக மீட்டு கரடியனாறு வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று அனுமதித்தபோதிலும், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

 

சம்பவ இடத்திற்குச் சென்ற மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டு, சிறுவனின் உடலைப் பார்வையிட்ட பின் நீதிமன்ற நீதவானுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார். பிரேத பரிசோதனைக்கான நடவடிக்கைகளுடன் ஆயித்தியமலை பொலிஸார் மேல் விசாரணைகளைத் தொடர்ந்து வருகின்றனர்.

பாலம் புனரமைப்புப் பணியின்போது எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்கொள்ளாததே இந்த அனர்த்தத்திற்கு முதன்மைக் காரணம் என அப்பகுதி பொதுமக்களும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் கடும் விசனமும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
கச்சத்தீவு என்பது இலங்கைக்குச் சொந்தமானது!

கச்சத்தீவு என்பது இலங்கைக்குச் சொந்தமானது!

கச்சத்தீவு எங்களுடையது!

கச்சத்தீவு எங்களுடையது!

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய  விளக்கம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய விளக்கம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

Mobitel 1278