Header Logo
பல்சுவை
சிரித்தபடி பாலத்தில் இருந்து குதித்த இளம்பெண்!

Sep 7, 2026 - 02:26 PM

சிரித்தபடி பாலத்தில் இருந்து குதித்த இளம்பெண்!
Mobitel Inner 1278
EDEX Inner

ஜம்மு காஷ்மீர் தோதா மாவட்டத்தில் பிரேம் நகர் அருகே உள்ள சிவா தால் பாலத்தில் இருந்து கடந்த 05 ஆம் திகதி நண்பகல் பாயல் தேவி என்ற அப்பெண் செனாப் நதியில் குதித்துள்ளார். 

கடந்த 05 ஆம் திகதி காலை உள்ளூர் திருவிழாவிற்கு சென்ற அவர், உடல்நிலை சரியில்லாததால் வைத்தியசாலைக்கு சென்று வருவதாக தனது தந்தை கிருஷண லாலுக்கு போன் செய்து கூறியுள்ளார். 

ஆனால் வைத்தியசாலையில் வைத்தியர் இல்லாததால் அவர் தனது கிராமத்தை சேர்ந்த ஒருவருடன் பைக்கில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். 

அப்போது எதிர்பாராதவிதமாக பாயலின் துப்பட்டா பைக்கின் சக்கரத்தில் சிக்கியுள்ளது. 

இதனால் அந்த நபர் வண்டியை நிறுத்தி துப்பட்டாவை எடுக்க முயன்றுள்ளார். அதேநேரம் பாயல் திடீரென, "நான் தற்கொலை செய்து கொள்ளப் போறேன்" என கத்தியபடி அருகில் இருந்த பாலத்தை நோக்கி ஓடியுள்ளார். 

அங்கிருந்தவர்கள் இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்து அவரை சமாதானப்படுத்த முயன்றனர் 

பாயலை அழைத்து வந்த நபர் தந்தை கிருஷ்ண லாலுக்கு போன் செய்து உங்கள் மகள் பாலத்தில் இருந்து கீழே குதிக்க முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார். 

பதறிய தந்தை கிருஷ்ண லால், மகளிளின் போனுக்கு கால் அடித்துள்ளார். பாயல் போனை எடுக்க அவரிடம், "என்ன ஆச்சு, யாராவது உன்னை ஏதவாது செய்தார்களா?" என கிருஷண லால் கேட்டுள்ளார். 

அதற்குப் பாயல் தேவி, " அதெல்லாம் இல்ல அப்பா. இது என் வாழ்க்கை, எனக்கு இப்படிப் போக வேண்டும் என்று தோன்றுகிறது. பை பை அப்பா" எனக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார். 

அதன்பின்னர் அவர் அங்கிருந்தவர்களுக்கு பை பை சொல்லியபடி நதியில் குதித்துள்ளார். 

பாயல் பாலத்தில் நின்றிருந்த காட்சிகளும், சிரித்தபடி அவர் பை, பை சொன்னதும், அங்கிருந்தவர்கள் அவரைத் தடுக்க முயல்வதும் வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் பரவி வருகிறது. 

பாயல் நதியில் குதித்த செய்தி அறிந்து சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த காவல்துறை செனாப் நதியில் இறங்கி தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், இதுவரை அந்தப் பெண்ணைக் கண்டுபிடிக்க முடியவில்லை. 

வைத்தியரை பார்க்கச் சென்ற பெண்ணுக்கு பாலத்திற்கு வருவதற்குள் என்ன நடந்தது? என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
கம்பளை பிரதான வீதியின் நிலச்சரிவு!

கம்பளை பிரதான வீதியின் நிலச்சரிவு!

தண்டாயுதபாணி உற்சவம்!

தண்டாயுதபாணி உற்சவம்!

கச்சத்தீவு என்பது இலங்கைக்குச் சொந்தமானது!

கச்சத்தீவு என்பது இலங்கைக்குச் சொந்தமானது!

கச்சத்தீவு எங்களுடையது!

கச்சத்தீவு எங்களுடையது!

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய  விளக்கம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய விளக்கம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

Mobitel 1278