Jan 26, 2025 - 01:49 PM -
0
கொழும்பு - புத்தளம் பிரதான வீதியின் லுணுஓயா பாலத்திற்கு அருகில் நேற்று (25) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சிலாபம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளத்தில் இருந்து சிலாபம் நோக்கி பயணித்த கார் ஒன்று, வீதியில் சென்றுகொண்டிருந்த குறித்த நபர் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தின் போது காரில் மோதி தூக்கி வீசப்பட்ட நிலையில் எதிரே பயணித்த மற்றுமொரு காருடனும் மோதி படுகாயமடைந்துள்ளார்.
இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் குறித்த நபரை உடனடியாக சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் இரண்டு கார்களின் சாரதிகள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விபத்துச் சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
--