Feb 8, 2025 - 05:24 PM -
0
இந்து சமயத்தில் வாஸ்து சாஸ்திரம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. வாஸ்து ஒரு வீட்டின் அமைப்பை சரியாக வைக்க உதவுவதோடு, வீட்டின் செல்வமும், அமைதியும் அதிகரிக்க உதவுவதாகவும் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் நாம் புதிதாக வீடு வாங்கும் போது எந்தெந்த விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என தெரிந்து கொள்வோம்.
புதிய வீட்டின் வாஸ்து
நீங்கள் வீடு வாங்கும் போது, அதில் உள்ள கழிப்பறையின் திசை குறித்து கவனம் தேவை. மேற்கு திசையில் கழிப்பறை அமைப்பது மிகவும் நல்லது. வேறு இடத்தில் கழிப்பறை இருந்தால் சந்தோஷத்தை ஏற்படுத்தும்.
சமையலறை
புதிய வீட்டில் வாஸ்து சாஸ்திரத்தின் படி வீடு வாங்கும் போது சமையல் அறையில் சிறப்ப கவனம் செலுத்துவது நல்லது. தென்கிழக்கு திசையான அக்னி மூலையில் அமைப்பது புனிதமானது.
பிரதான கதவு
வீட்டின் பிரதான கதவுக்கு முன்னால் ஒரு மரம், தொட்டி, குழாய் இருப்பது நல்லதல்ல. அப்படிப்பட்ட இடங்களில் வீடு வாங்குவது நேர்மறையான ஆற்றலைக் கடத்தாது.
பூஜை அறை
வீடு வாங்கும் போது வீட்டின் பூஜை அறை வடகிழக்கு திசையில் இருப்பது நல்லது. இதன் மூலம் வீட்டில் அமைதியும், குபேரனின் அருளும் கிடைக்கும்.
சூரிய ஒளிவாஸ்து சாஸ்திரத்தின்படி, நம்முடைய வீட்டில் சூரிய ஒளி விழுவது மிகவும் நன்மை தரும். இதனால் வீட்டில் வெளிச்சம் மட்டும் இல்லாமல், நுண்ணுயிரிகள் பெருகாமல் தடுக்கவும் உதவுகிறது. சூரிய ஒளி விழுகாத வகையில் உள்ள வீட்டில் வாடகைக்கு செல்வதோ அல்லது அது போன்ற வீட்டை வாங்குவது தவிர்ப்பது அவசியம்.