Header Logo

செய்திகள்
அரச இணைந்த சேவையாளர்களின் வருடாந்த இடமாற்றத்திற்கு புதிய சுற்றறிக்கை

May 29, 2026 - 01:58 PM -

0

அரச இணைந்த சேவையாளர்களின் வருடாந்த இடமாற்றத்திற்கு புதிய சுற்றறிக்கை

அரசின் இணைந்த சேவைகளில் உள்ள உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்றங்கள் பல்வேறு காரணங்களால் நடைமுறைப்படுத்தப்படாமை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்காக புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

அமைச்சுகளின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்திற்கொண்டு இந்த அறிவுறுத்தல்களும் வழிகாட்டல்களும் வெளியிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட இடமாற்ற நடைமுறையின்படி, இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இந்த வருடாந்த இடமாற்றச் சுற்றறிக்கை வெளியிடப்படுகிறது. 

இந்த வருடாந்த இடமாற்றச் செயல்முறையின் மூலம் உத்தியோகத்தர்களுக்கு பல்வேறு பணிஸ்தலங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைப்பதுடன், இதன் ஊடாக உத்தியோகத்தர்களின் ஊக்கத்தை அதிகரிப்பதும் நிறுவனங்களின் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இணைந்த சேவைகளின் உத்தியோகத்தர்களது வருடாந்த இடமாற்றச் செயல்முறைக்குரிய முக்கிய படிமுறைகள் குறித்தும் இந்தச் சுற்றறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.


MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

title