Header Logo

ஏனையவை
புத்தளத்தில் பெருந்தொகையான இஞ்சியுடன் மூவர் கைது

Feb 17, 2025 - 02:57 PM -

0

புத்தளத்தில் பெருந்தொகையான இஞ்சியுடன் மூவர் கைது

புத்தளம், கற்பிட்டி - தளுவ பிரதேசத்தில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட ஒருதொகை காய்ந்த இஞ்சி மூடைகளுடன் சந்தேக நபர்கள் மூவர் கடந்த 11 ஆம் திகதி கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான புத்தளம் - தம்பபன்னி நிறுவன கடற்படையினர் கற்பிட்டி -  தளுவ பிரதேசத்தில் கடந்த 11 ஆம் திகதி இரவு விசேட சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

 

இதன்போது, சந்தேகத்திற்கிடமான கெப் வண்டியொன்றை கடற்படையினர் சோதனையிடப்பட்டனர்.

குறித்த கெப் வண்டியில், 32 பொதிகளில் அடைக்கப்பட்ட நிலையில் 1,158 கிலோ 60 கிராம் உலர்ந்த இஞ்சியும், 45 கிலோ கிராம் கருவாடும் கடற்படையினால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

மேலும், கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் புத்தளம் மற்றும் மணல்தோட்டம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 

இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட உலர்ந்த இஞ்சி, உலர்ந்த கருவாடு மற்றும் கெப் வண்டி என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

--


MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

title