Mar 17, 2025 - 11:14 AM -
0
காத்தான்குடி காங்கேயனோடை பகுதியில் 3,492 போதை மாத்திரைகளுடன் ஒருவரை நேற்று (16) இரவு கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று இரவு 11 மணியளவில் குறித்த பகுதியிலுள்ள பதூர்பள்ளி வீதியில் உள்ள வீடு ஒன்றை முற்றுகையிட்ட பொலிஸார் சட்டவிரோதமாக வைத்திருந்த 3,492 போதை மாத்திரைகளுடன் 36 வயதுடைய ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுத்து வருதாக பொலிஸார் தெரிவித்தனர்.
--