Header Logo

கிழக்கு
பெண்களின் செயற்பாடுகளே நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புகிறது

Mar 26, 2025 - 07:02 PM -

0

பெண்களின் செயற்பாடுகளே நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புகிறது

நாட்டில் அதிகளவான பெண்களின் செயற்பாடுகளே நாட்டின் பொருளாதாரத்தினை கட்டியெழுப்பிவருவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்ரீனா முரளிரன் தெரிவித்தார். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும் அவர்களின் உற்பத்திகளுக்கான சந்தைவாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. 

சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சின் வழிகாட்டுதலில் ஐக்கிய நாடுகள் பெண்கள் அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக ஜப்பானிய நிதி உதவியில் ஷெரிஷலிஸ் நிறுவகத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இதன்கீழ் பெண்களுக்கான தொழில் முயற்சியாளர்களுக்கான தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் பெண் முயற்சியாளர்களின் பண்முகத்தன்மை கண்காட்சியும் இன்று (26) மட்டக்களப்பு கல்லடியில் நடைபெற்றது. 

மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் பிரணவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்ரீனா முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். 

இந்த நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சபையின் பெண் அபிவிருத்தி திட்டத்தின் இணைப்பாளர்களான மிக்ஷேல்,மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்னம்,கோறளைப்பற்று வடக்கு வாகரை,வாழைச்சேனை பிரதேச செயலாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். 

பெண்களின் பொருளாதாரத்தினை வலுப்படுத்தல் மற்றும் முயற்சியான்மையினை மேம்படுத்தல் திட்டத்தின் முன்னெடுக்கப்பட்டுவந்த பல்வேறு பயிற்சி திட்டங்களை நிறைவுசெய்தவர்களுகான சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் பெண் முயற்சியாளர்களுக்கான தொழில் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன. 

வாகரை, வாழைச்சேனை, மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவுகளில் இந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த திட்டங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டுவரும் உற்பத்திகள் கொண்ட கண்காட்சி கூடங்களும் இதன்போது திறந்துவைக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான உற்பத்தியாளர்களின் கண்காட்சி கூடங்களும் இதன்போது திறந்துவைக்கப்பட்டன.

--

Comments
0

MOST READ

காணொளி
ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

title