Header Logo

செய்திகள்
சொத்து வரி, வாடகை மீதான முத்திரை வரி 100 சதவீதம் அதிகரிப்பு

Mar 30, 2025 - 03:18 PM -

0

சொத்து வரி,  வாடகை மீதான முத்திரை வரி 100 சதவீதம் அதிகரிப்பு

சொத்து குத்தகை அல்லது வாடகை ஒப்பந்தங்களுக்கான முத்திரை வரியை 100 சதவீதம் அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. 

ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் குறித்த கட்டண அதிகரிப்பு அமுலுக்கு வரும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 

எந்தவொரு சொத்தையும் குத்தகைக்கு அல்லது வாடகைக்கு விடும்போது, ​குத்தகை ஒப்பந்தம் அல்லது வாடகை ஒப்பந்தத்திற்கான முழு காலத்திற்கும் குத்தகை வரி அல்லது வாடகைக்காக ஒவ்வொரு 1000 ரூவாவிற்கும் அதன் ஒரு பகுதிக்காகவும் 10 ரூபாய் முத்திரை கட்டணம் தற்போது வசூலிக்கப்படுகிறது. 

எனினும் குறித்த முத்திரை கட்டணம் ஏப்ரல் முதலாம் திகதி முதல் 20 ரூபாயாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை நிதி அமைச்சர் என்ற வகையில் அநுர குமார திசாநாயக்கவால் வெளியிடப்பட்டுள்ளது. 

2006 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த முத்திரை வரி திருத்தப்படுவது இதுவே முதல் முறை என்பது விசேட அம்சமாகும். 

இருப்பினும், நுகர்வோர் கடன் சட்டத்தின் கீழ் செய்து கொள்ளப்பட்ட முழு உரிமையுடைய ஒப்பந்தத்தின் கீழ் செலுத்த வேண்டிய மொத்த மதிப்பில் 1,000 ரூபாய் அல்லது அதன் ஒரு பகுதிக்காக அறவிடப்படும் முத்திரை கட்டணம் திருத்தப்பட மாட்டாது நிதியமைச்சு தௌிவுபடுத்தியுள்ளது. 

அதன்படி, பத்து ரூபாயான அந்த முத்திரை வரி தொடர்ந்து அமுல்படுத்தப்படும் என்று நிதியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.


MOST READ

காணொளி
வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

செம்மணியில் போராட்டம்!

செம்மணியில் போராட்டம்!

யாழில் அர்ச்சுனாவுக்கு செருப்பு மாலை!

யாழில் அர்ச்சுனாவுக்கு செருப்பு மாலை!

அர்ச்சுனா - கஜேந்திரகுமார் இடையே மீண்டும் வாக்குவாதம்

அர்ச்சுனா - கஜேந்திரகுமார் இடையே மீண்டும் வாக்குவாதம்

வழமைக்குத் திரும்பும் மலையக ரயில் சேவைகள்!

வழமைக்குத் திரும்பும் மலையக ரயில் சேவைகள்!

ஒரு வருடமாகியும் என்புத் தொகுதிகள் இன்னமும் பரிசோதனைக்கு அனுப்பப்படவில்லை!

ஒரு வருடமாகியும் என்புத் தொகுதிகள் இன்னமும் பரிசோதனைக்கு அனுப்பப்படவில்லை!

படத்தில் மட்டும் தான் விஜய் ஹீரோவா?

படத்தில் மட்டும் தான் விஜய் ஹீரோவா?

அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

நெல் விலையை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்புப் பேரணி!

நெல் விலையை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்புப் பேரணி!

title