Aug 15, 2026 - 05:15 PM

நடிகர் சூர்யா, திரிஷா நடிப்பில் இயக்குநர் ஆர்ஜே பாலாஜி இயக்கி வில்லனாக நடித்த படம் தான் கருப்பு. கடந்த மே 15 ஆம் திகதி ரிலீஸாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவையும் பாக்ஸ் ஆபிஸில் 300 கோடி ரூபாவுக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது.
இந்நிலையில், நடிகர் மன்சூர் அலி கான் அப்படத்தில் ஒருசில காட்சிகளில் நடித்திருந்தார். ஆனால் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில், சமீபத்தில் ரொம்பவே பாதிக்கப்பட்டேன், வேதனையாக இருக்கிறது.
கருப்பு படத்தில் 'நாங்க நாலு பேரு' பாடலுக்கு நானும் ஆடியிருந்தேன். அந்த காட்சியை தூக்கிட்டாங்க, பரவாயில்லை. யூடியூப்பில் வரும் என்று சொன்னார்கள், கஷ்டப்பட்டு சிறப்பாக ஆடிய அந்தக் காட்சியை காணோம்.
ஏன் இப்படி இழுத்தடிக்கிறீங்க? நீங்க சம்பாறிங்க, சொத்து சேருங்க, உங்களுக்கு ஆண்மை இருந்தால் அதை போடுங்க, அடுத்தவன் சோத்துல ஏன் மண்ணை அள்ளிப் போடுறீங்க? என்று வேதனையுடன் மன்சூர் அலி கான் தெரிவித்துள்ளார்.























