Header Logo

கிழக்கு
புதிய இயந்திர பாதை சேவைகள் ஆரம்பம்!

Apr 4, 2025 - 12:27 PM -

0

புதிய இயந்திர பாதை சேவைகள் ஆரம்பம்!


இலங்கையின் மிகப்பெரும் நீர்வழிப்போக்குவரத்துப்பாதைகளில் ஒன்றாக கருதப்படும் குறுமண்வெளி - மண்டூர் மற்றும் அம்பிளாந்துறை - குருக்கள்மடம் பகுதிக்கான புதிய இயந்திர பாதை சேவைகள் இன்று (04) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டன.

 

மிக நீண்டகாலமாக மிக மோசமான நிலையிலிருந்த பாதையானது தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் வேண்டுகோளின் அடிப்படையில் புதிய பாதை சேவையாக இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

 

கிழக்கு மாகாண ஆளுனர் ஜயந்தலால் ரட்ன சேகரவினால் இந்த சேவை இன்று காலை இரண்டு போக்குவரத்து துறைகளிலும் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

 

இதற்காக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களம் ஊடாக 80 மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டு இரண்டு இயந்திரப்பாதைகளும் கொள்வனவு செய்யப்பட்டு போக்குவரத்துக்கு வழங்கப்பட்டுள்ளன.

 

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்கள மாகாண பணிப்பாளர் கருணைநாதன் உட்பட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

 

களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தினையும் போரதீவுப்பற்று மற்றும் பட்டிப்பளை பிரதேச செயலகப்பிரவுகளையும் இணைக்கும் மிக முக்கியமான நீர்வழி போக்குவரத்துச்சேவையாக குறுமண்வெளி - மண்டூர் மற்றும் அம்பிளாந்துறை - குருக்கள்மடம் போக்குவரத்து பாதைகள் காணப்படுகின்றன.

 

இதன் ஊடாக தினமும் ஆயிரக்கணக்கான அரச ஊழியர்களும், பாடசாலை மாணவர்களும், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களும் பயணம் செய்யும் நிலை காணப்படுகின்றது.

 

எனினும் கடந்த காலத்தில் சேவையிலீடுபட்டுவந்த இயந்திரப்பாதையானது மிகமோசமான வகையில் சேதமடைந்திருந்ததன் காரணமாக மக்கள் ஆபத்தான பயணத்தையே முன்னெத்துவரும் நிலையிருந்தது.

 

இது தொடர்பில் கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு முயற்சிகளையும் முன்னெடுத்திருந்த நிலையில் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தினால் இதற்கான புதிய இயந்திர பாதைகள் வழங்கப்பட்டு சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 

இயந்திரப்பாதை சேவையில் செல்லாவிட்டால் போரதீவுப்பற்று மற்றும் பட்டிப்பளை பிரதேச செயலகப்பிரவுகளுக்கு செல்வோர் சுமார் 20கிலோமீற்றர் தூரத்தினை கடக்கவேண்டிய நிலையில் பாதை சேவையூடாக சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்திற்குள் தமக்கான பகுதியை அடையமுடியும் என மக்கள் தெரிவித்தனர்.

--


MOST READ

காணொளி
செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

title