Header Logo

செய்திகள்
மின்சார வாகன அனுமதிப் பத்திரத்தில் பல மோசடிகள்

Apr 4, 2025 - 03:38 PM -

0

மின்சார வாகன அனுமதிப் பத்திரத்தில் பல மோசடிகள்

வெளிநாட்டு பணப்பரிமாற்றங்களின் அடிப்படையில் வெளிநாட்டு பணிபுரியும் இலங்கையர்களுக்கு முழு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக இலங்கை பாராளுமன்றத்தின் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) விசாரணையில் தெரியவந்துள்ளது.


கோபா குழுவின் விசாரணையின் போது, அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதில் பண மோசடி நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுவதாக தணிக்கை அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.


2024 செப்டம்பர் 30 வரை இறக்குமதி செய்யப்பட்ட 921 வாகனங்களுக்கு சொகுசு வாகன வரி விலக்கு  உயர்த்தப்பட்டதன் காரணமாக, அரசாங்கத்திற்கு 2.42 பில்லியன் ரூபாய் வரி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதன்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.


மேலும், இரண்டு முக்கிய நிறுவனங்கள் 640 அனுமதிப்பத்திர பெறுநர்களுக்கு வசதிகளை வழங்கிய இறக்குமதியாளர்களாக செயல்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரியவந்துள்ளது.


கோபா குழுவில் வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.


குறித்த வெளிப்படுத்தலின் படி, அனுமதிப் பத்திரங்கள் வழங்கும் போர்வையில் வியாபாரம் ஒன்று நடந்துள்ளதாக கோபா குழுவிற்கு தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.


குறிப்பிட்ட காலகட்டத்தில் வெளிநாடுகளுக்குச் செல்லாத நான்கு (4) நபர்களுக்கு மின்சார வாகன அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


முன்னாள் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர், முன்னாள் அமைச்சரின் வேண்டுகோளின் பேரில் இவை அனைத்தையும் செய்ததாக கோபா குழுவில் தெரியவந்துள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

title