கிழக்கு
மட்டக்களப்பில் தேர்தலுக்கான சகல நடவடிக்கைகளும் நிறைவு

May 5, 2025 - 05:25 PM -

0

மட்டக்களப்பில் தேர்தலுக்கான சகல நடவடிக்கைகளும் நிறைவு

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான சகல நடவடிக்கைகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிறைவு பெற்று இன்று(05) காலை வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான தேர்தல் நிலையமான மட்டக்களப்பு இந்துக் கல்லூரி பாடசாலையில் இருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொண்டு செல்லப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் 455,520 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன் 447 வாக்களிப்பு நிலையங்கள் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளது. 

நாளை காலை 7:00 மணி முதல் 4.00 மணி வரை வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்த முடியும் என்பதுடன், வாக்குகளை எண்ணுவதற்காக 144 வாக்கெண்ணும் நிலையங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களில் கடமையாற்றுவதற்காக சுமார் 6000 அரச ஊழியர்கள் பணிக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

அத்தோடு தேர்தல் செயற்பாடுகளுக்காக பொலிஸார் மற்றும் இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

--

Comments
0

MOST READ
01
02
03
04
05