பல்சுவை
குழந்தைகளுக்கு 'சிந்தூர்' என பெயர் சூட்டல்!

May 13, 2025 - 03:30 PM -

0

குழந்தைகளுக்கு 'சிந்தூர்' என பெயர் சூட்டல்!

காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்களை 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற நடவடிக்கை மூலம் இந்தியா தாக்கியது. 

 

இதில் பயங்கரவாதிகள், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் என 140 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் என்றென்றும் நினைவில் இருக்கும் வகையில், சமீபத்தில் பிறந்த தங்கள் குழந்தைகளுக்கு சிலர் இப்பெயரை சூட்ட தொடங்கி உள்ளனர்.

 

அந்தவகையில் உத்தரபிரதேசத்தில் குஷிநகர் மருத்துவ கல்லூரி வைத்தியசாலையில் கடந்த 10, 11 ஆகிய திகதிகளில் பிறந்த 17 பெண் குழந்தைகளுக்கு அவர்களது குடும்பத்தினர் 'சிந்தூர்' என்று பெயரிட்டுள்ளனர் என வைத்தியசாலை பணிப்பாளர் ஆர்.கே.ஷாஹி தெரிவித்தார்.
 

Comments
0

MOST READ
01
02
03
04
05