Mar 4, 2026 - 11:56 AM -
0
மத்திய கிழக்கிற்கான மட்டுப்படுத்தப்பட்ட விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் பயணிகளுக்கு அறிவித்துள்ளது.
அதற்கமைய, தேவையான அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் UL231 (கொழும்பு - டுபாய்) மற்றும் UL232 (டுபாய் - கொழும்பு) ஆகிய விமானங்கள் இன்று இயக்கப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.