Header Logo
Mogo Academy

ஜோதிடம்
வாழ்க்கையில் அதிக போராட்டங்களை சந்திக்கும் ராசிகள்

May 20, 2025 - 11:33 AM -

0

வாழ்க்கையில் அதிக போராட்டங்களை சந்திக்கும் ராசிகள்
Mobitel inner

ஜோதிடத்தில் படி சில ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில், மற்றவர்களை விட அதிக சிரமங்களை சந்திக்கக்கூடிய நபர்களாக இருப்பார்கள். தாங்கள் நினைத்த ஒவ்வொரு விஷயத்தையும் அடைய அதிக சிரமங்களை, போராட்டங்களை சந்தித்த பின்னரே அடைய முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி, வேலையில் வெற்றி, தொழிலில் முன்னேற்றம் என அவர்கள் நினைத்த விஷயங்கள் நிறைய மற்றவர்களை விட சிரமப்படுவார்கள். குறிப்பாக சனி, ராகு கேது, சந்திரன் போன்ற கிரகங்களின் அமைப்பு, சில ராசிகளின் திருமண வாழ்க்கையில் சிரமங்களை தரக்கூடியதாக அமையும். சிலர் அவர்களின் துறையில் நிபுணத்துவம் பெற்று இருந்தாலும் அவர்கள் எதிர்பார்த்து வெற்றியடைய அதிகம் போராட வேண்டியதாக இருக்கும்.

 

மேஷம்

 

செவ்வாய் பகவான் அதிபதியாக கொண்ட மேஷ ராசியில் சேர்ந்தவர்கள் எல்லா விஷயங்களிலும் வேகம் மற்றும் முரட்டுத்தனமாக செயல்படக்கூடியவர்கள். அதனால் பல நேரங்களில் தங்கள் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி நிதானமாக செயல்படுவதற்கு பதிலாக, அந்த செயலை செய்து முடிக்க வேகம் தான் முக்கியம் என நினைத்து செயல்படுவார்கள். அதனால் அவர்கள் நினைத்ததை விட அதிக சிரமம் மற்றும் போராட்டத்திற்கு பின்னரே வேலையை செய்து முடிக்க முடியும். மேஷ ராசியினர் எந்த ஒரு வேலையையும் சரியான திட்டமிடலுடன் செய்தால் வெற்றி நிச்சயம்.

 

கடகம்

 

சந்திர பகவான் ஆளக்கூடிய கடக ராசியை சேர்ந்தவர்கள், அதிக மன சஞ்சலம், உணர்ச்சி வசப்படக்கூடிய நபர்களாக இருப்பார்கள். இவர்கள் மனக்கட்டுப்பாடு குறைவாக இருப்பதால் ஒவ்வொரு விஷயத்தையும் கற்றுக் கொள்ள அதிக காலத்தை எடுத்துக் கொள்வார்கள். பிறருக்காக கருணை, அன்பு காட்டுவதால் இவர்களின் முன்னேற்றம் தடைப்பட வாய்ப்பு உண்டு. பிறருக்கு உதவுவதில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பதால் தங்கள் வேலையை முடிப்பதில் தாமதம் ஏற்படும். அனைவரையும் அனுசரித்து செல்ல வேண்டும் என்ற மனநிலை கொண்டவர்கள் என்பது பெரிய முடிவு எடுப்பதில் சிக்கல் ஏற்படும். இதனால் இவர்கள் ஒவ்வொரு விஷயத்திலும் வெற்றி அடைய அதிக போராட்டம் நிறைந்ததாகவே இருக்கும். பிறரின் அபிப்ராயத்தை ஏற்றுக்கொண்டு செயல்படுவார்கள்.

 

தனுசு

 

குரு பகவான் ஆளக்கூடிய ராசியாக தனுசு ராசி இருந்தாலும், ஜோதிடத்தின் படி பிற கிரகங்களின் ஆதரவு குறைவாகவே இந்த ராசிக்கு கிடைக்கும். இவர்கள் சாகச மனபான்மை அதிகம் கொண்டவர்கள். தங்களுடைய குடும்ப வாழ்க்கை, வேலை, தொழில் என எதிலும் சரியான திட்டமிடலோ, எதிர்காலம் குறித்த கவலையும் குறைவாக இருக்கும். எதிலும் சாகச மனநிலை இருப்பதால் திடீர் முடிவுகள் இவர்களுக்கு பாதகமாக அமையும். இதன் காரணமாக அவர்களின் வாழ்க்கையிலும், நிதிசார்ந்த விஷயங்களில் முன்னேற அதிக போராட்டமும், சிரமங்களையும் சந்திக்க நேரிடும்.

 

மகரம் 
 
மகர ராசி சிறந்தவர்கள் கடின உழைப்பிற்கு பெயர் பெற்றவர்கள். எந்த ஒரு செயலையும் மிகவும் பொறுப்புடன் செய்வார்கள். என்னதான் கடின உழைப்பு இருந்தாலும், சரியான திட்டமிடல் தான் முக்கியம் என்பதை உணர்ந்து செயல்படுவது அவசியம். ஒரு குழுவாக செய்யக்கூடிய தொழில், வேலையிலும் அதில் வெற்றிக்கு தேவையான திட்டமிடல், கடின உழைப்பு தான் முக்கியம் என நினைக்கக் கூடியவர்கள். அதனால் இவர்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயங்களிலும் வெற்றி பெற போராட்டமான சூழலே நிலவும்.

 

மீனம்

 

மீன ராசியை சேர்ந்தவர்கள் எப்போதும் ஒரு கற்பனை உலகத்தில் இருப்பார்கள். அதனால் நிதர்சன உலகில் எது தேவை என்பதை உணராமல் செயல்படுவார்கள். அதனால் பிரச்சனைகளுக்கு புதிய தீர்வு காண நினைப்பார்களே தவிர அந்த பிரச்னைகளை தீர்ப்பதற்கான திட்டமிடல் அவர்களிடம் அதிக அளவில் இருக்காது. புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதிலும், செயல்படுத்துவதிலும் அதிக சுணக்கம் காட்டுவார்கள். அதனால் எந்த ஒரு செயலிலும் அதிக போராட்டத்திற்கு பின்னாடி வெற்றி பெறுவார்கள்.


MOST READ

காணொளி
அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

Mobitel Upahara