Header Logo

கிழக்கு
மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழப்பு

May 26, 2025 - 04:34 PM -

0

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழப்பு

திருகோணமலை, கிண்ணியாவில் இருந்து மட்டக்களப்பு, ஓட்டுமாவடி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வேககட்டுப்பாட்டை இழந்து வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள பனிச்சங்கேணி பாலத்தில் மோதி இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் நேற்று (25) இரவு இடம்பெற்றுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

 

ஓட்டமாவடி - பதுரியா நகர், ஆலையடி பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் மற்றும் ஓட்டமாவடி, சூடுபத்தினசேனை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

 

ஓட்டுமாவடியைச் சோந்த 6 நண்பர்கள் 3 மோட்டார் சைக்கிளில் சம்பவதினமான நேற்று இரவு கிண்ணியாவில் இருந்து ஓட்டமாவடி பகுதியை நோக்கி பயணித்த போது வாகரை பனிச்சங்கேணி பாலத்தில் வேககட்டுப்பாட்டை மீறி பாலத்துடன் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

 

இந்நிலையில் இரு இளைஞர்களும் படுகாயமடைந்த நிலையில் வாகரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் இருவரும் உயிரிழந்தனர்.

 

இதனையடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அங்கிருந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

--


MOST READ

காணொளி
செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

title