May 27, 2025 - 11:10 AM -
0
அரியலூர் அருகே இளம் பெண் ஒருவர் தனக்குத்தானே பிரசவம் பார்த்துள்ளார். அப்போது மருத்துவமனை கழிவறையில் பிறந்த பச்சிளம் குழந்தையின் கழுத்தை அழுத்தி கொலைச் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் அருகே இளம் பெண் ஒருவர் தனக்குத்தானே பிரசவம் பார்த்துள்ளார். அப்போது மருத்துவமனை கழிவறையில் பிறந்த பச்சிளம் குழந்தையின் கழுத்தை அழுத்தி கொலைச் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த கண்டராதீர்த்தம் கிராமத்தை சேர்ந்தவர் வேதியராஜ். இவரது மகள் லாரா (வயது 20). லாராவுக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. இருப்பினும் 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில், அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வேதியராஜ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அப்போது எலும்பு முறிவு சிகிச்சை பிரிவில் கடந்த 5 நாட்களாக சிகிச்சையில் உள்ள வேதியராஜை பார்ப்பதற்காக அவரது மனைவி மற்றும் மகள் லாரா ஆகியோர் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்துள்ளனர். இந்த சூழலில் நேற்று அதிகாலை 5 மணியளவில் லாராவுக்கு பிரசவலி ஏற்பட்டுள்ளது.
அப்போது கழிவறைக்கு செல்லவேண்டும் என்று கூறி தனது தாய்யை அழைத்துக்கொண்டு மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். தாய் வெளியில் நிற்க சொல்லி லாரா உள்ளே சென்றார். சுமார் கழிவறைக்கு சென்ற லாரா அங்கேயே 3 மணி நேரம் இருந்துள்ளார்.
அப்போது தனக்குத்தானே பிரசவம் பார்த்து பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். பின்னர் அந்த குழந்தையை கழிவறையின் கோப்பையில் தலை உள்ளே செல்லுமாறு அழுத்தியுள்ளார். இதில் அந்த குழந்தையின் உடல் முழுவதும் உள்ளே செல்லாமல் கால்கள் மட்டும் வெளியில் நீட்டிக்கொண்டு இருந்துள்ளது.
அப்போது எதிர்பாராத விதமாக மருத்துவமனையில் வேலை செய்யும் பெண் துப்புரவு பணியாளர் ஒருவர் கழிவறைக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வித்தியாசமான சத்தம் கேட்டதால் அவர் சந்தேகம் அடைந்தார். உடனே மருத்துவமனையில் பணியில் இருந்த பொலிஸார் மற்றும் ஊழியர்களிடம் இதுபற்றி தெரிவித்தார்.
இதனால் அங்கு கூட்டம் கூடியது. அப்போது மருத்துவமனையின் கதவை திறந்து பார்த்த போது பொலிஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கழிவறையின் ப்லஸ்சீல் பச்சிளம் குழந்தை ஒன்று இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதை அடுத்து உடனடியாக அரியலூர் நகர பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில், மருத்துவமனைக்கு விரைந்து வந்த பொலிஸார் சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கழிவறை கோப்பையை உடைத்து குழந்தையின் சடலத்தை வெளியில் எடுத்தனர். உடனடியாக பிரேத பரிசோதனைக்கும் அனுப்பி வைத்தனர்.இதற்கிடையே இளம்பெண் லாரா அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார்.
அப்போது அங்கிருந்தவர்கள் அவரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். தற்போது லாரா அரியலூர் பழைய அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தொடர்பாக அரியலூர் நகர காவல்துறையினர் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், குழந்தையை கொன்றதற்கான காரணம் என்ன?, அவர் கர்ப்பமடைய யார் காரணம்? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனக்குத்தானே குழந்தையை பெற்றெடுத்து அதனை கழிவறை கோப்பையில் அழுத்தி இளம்பெண் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.