Header Logo
Mogo Academy

உலகம்
தெற்கு சூடானில் விமான விபத்து: 14 பேர் உயிரிழப்பு

Apr 28, 2026 - 06:55 AM -

0

 தெற்கு சூடானில் விமான விபத்து: 14 பேர் உயிரிழப்பு
Mobitel inner

தெற்கு சூடானின் தலைநகர் ஜூபாவிற்கு அருகில் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதிலிருந்த 14 பேரும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை (SSCAA) தெரிவித்துள்ளது. 

மோசமான வானிலை காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

விமானம் புறப்பட்ட 30 நிமிடங்களிலேயே அனைத்துத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. 

உயிரிழந்தவர்களில் விமானியும் 13 பயணிகளும் அடங்குவர். பயணிகளில் 12 பேர் சூடான் நாட்டவர்கள் என்றும், இருவர் கென்ய நாட்டவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

2011 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதன் பின்னரான ஒரு தசாப்த காலப்பகுதியில், சூடானில் 55-க்கும் மேற்பட்ட விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளதோடு, அதன் விளைவாகப் பல உயிர்கள் பலியாகியுள்ளன. 

இதற்கு முன்னர், 2015 நவம்பரில் ஜூபா விமான நிலையத்திற்கு அருகில் அன்டனோவ் (Antonov) விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 41 பேர் உயிரிழந்தமையே மிக மோசமான விமான விபத்தாகக் கருதப்படுகிறது.


MOST READ

காணொளி
அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

Mobitel Upahara