Apr 28, 2026 - 06:55 AM -
0
தெற்கு சூடானின் தலைநகர் ஜூபாவிற்கு அருகில் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதிலிருந்த 14 பேரும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை (SSCAA) தெரிவித்துள்ளது.
மோசமான வானிலை காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானம் புறப்பட்ட 30 நிமிடங்களிலேயே அனைத்துத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
உயிரிழந்தவர்களில் விமானியும் 13 பயணிகளும் அடங்குவர். பயணிகளில் 12 பேர் சூடான் நாட்டவர்கள் என்றும், இருவர் கென்ய நாட்டவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
2011 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதன் பின்னரான ஒரு தசாப்த காலப்பகுதியில், சூடானில் 55-க்கும் மேற்பட்ட விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளதோடு, அதன் விளைவாகப் பல உயிர்கள் பலியாகியுள்ளன.
இதற்கு முன்னர், 2015 நவம்பரில் ஜூபா விமான நிலையத்திற்கு அருகில் அன்டனோவ் (Antonov) விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 41 பேர் உயிரிழந்தமையே மிக மோசமான விமான விபத்தாகக் கருதப்படுகிறது.
