ஜோதிடம்
பாரிய பிரச்சினைகள் தீரப்போகும் 4 ராசிகள்

May 28, 2025 - 10:30 AM -

0

பாரிய பிரச்சினைகள் தீரப்போகும் 4 ராசிகள்

குரு மற்றும் புதன் ஆகிய இருவரும் அறிவு, கல்வியை தரக்கூடிய நல்வழிப்படுத்துபவர்கள். அதனால் தேவர்களின் குருவாக குரு பிரகஸ்பதியும், கிரகங்களின் இளவரசனாக புதனும் குறிப்பிடுகின்றனர்.

 

தற்போது குரு மிதுனத்தில் சஞ்சரிக்கக்கூடிய நிலையில், ஜூன் 6 ஆம் திகதி காலை 9.15 ஆம் திகதி மிதுன ராசி அதிபதியான புதன் அங்கு நுழைய உள்ளார். அங்கு குரு - புதன் சேர்ந்து பத்ர யோகத்தை உருவாகின்றது. இது சிலரின் வாழ்க்கையில் பெரியளவில் நன்மைகளும், வெற்றி, மகிழ்ச்சி என வாரி வழங்கும்.வேலை, தொழில் மற்றும் வணிகத்தில் வெறி பெற உள்ள ராசிகளை இங்கு தெரிந்து கொள்வோம்.

 

கன்னி

 

கன்னி ராசிக்கு கர்ம, தொழில் ஸ்தானமான 10 ஆம் ஸ்தானத்தில், ராசிநாதன் புதன் நுழைவதும் குருவுடன் இணைவதால் பல விதத்தில் சாதகமான பலனைத் தரும். பணியிடத்தில் உங்கள் வேலைகளை புத்திசாலித்தனமாகச் செய்து முடிப்பீர்கள். தொழில் தொடர்பாக உங்களின் புதிய யுக்திகள் வெற்றியையும், அதிக லாபத்தையும் தரும். உங்கள் போட்டியாளர்களை விட மிகவும் சிறப்பாக செயல்பட முடியும். இது நீங்கள் செய்யக்கூடிய வேலை, தொழில், வணிகத்தில் பெரியளவில் முன்னேற்றத்தையும், மரியாதையைப் பெற்றுத் தரும். சமூகம் சார்ந்த விஷயங்களை சிந்திப்பீர்கள்.

 

விருந்து, விழாக்களில் கலந்து கொள்ளுதல், பெரியவர்களை சந்திக்க வாய்ப்பு உண்டு.
பரிகாரமாக பால், அரிசி தானம் செய்வது சுப பலனை தரும்.

 

விருச்சிகம்

 

விருச்சிக ராசிக்கு குரு - புதன் சேர்க்கை அஷ்டம ஸ்தானத்தில் நடக்க உள்ளது. பொதுவாக அஷ்டம ஸ்தானத்தில் எந்த கிரகம் இருந்தாலும் சாதகமான பலனைத் தராது என கருதப்படுவது உண்டு. ஆனால் புதனின் மாற்றம் உங்களுக்கு எதிர்பாராத பல நல்ல நன்மைத் தரும். திடீர் பணவரவு கிடைக்கும். விளையாட்டு, போட்டித் தேர்வில் வெற்றி கிடைக்கும். சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மதிப்பு மரியாதை கிடைக்கும். பதவி உயர்வுக்கான வாய்ப்பு உண்டு.

 

இந்த காலத்தில் உங்கள் கோபத்தையும், பேச்சையும் கட்டுப்படுத்துவது அவசியம். இதனால் தேவையற்ற கருத்து வேறுபாடுகள், வாக்குவாதங்கள் ஏற்படாது.

 

தியானம், யோகா செய்வதும், ஓம் மந்திரத்தை தினமும் 5 நிமிடங்களாவது உச்சரிப்பது நன்மை தரும்.

 

மகரம்

 

புதன் பகவான் ராசிக்கு நோய், எதிரி ஸ்தானத்தில் பெயர்ச்சியாக உள்ளார். அங்கு குருவுடன் இணைய உள்ளார். இதன் மூலம் நிதி சார்ந்த விஷயங்களில் வெற்றியையும், சாதகமான பலனையும் தரும். குரு புதன் இணைவால் உருவாகும் பத்ர யோகத்தால் உங்களின் ஆரோக்கியத்தில் நிவாரணம் கிடைக்கும். நீங்கள் செய்யக்கூடிய தொழில், வியாபாரத்தில் இருக்கும் தடைகள், எதிரிகள் தொல்லை தீரும். இந்த காலத்தில் தேவையற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்காமல் சரியாக பயன்படுத்துவீர்கள்.

 

உங்கள் செலவுகளைக் கட்டுக்குள் வைப்பது நன்மை தரும்.குடும்பத்தில், சமூகத்திலும் உங்கள் மரியாதை, கெளரவம் அதிகரிக்கும். கலைத்துறை, எழுத்து, ஊடகத்துறையில் இருப்பவர்களுக்கு பெரியளவில் முன்னேற்றம் கிடைக்கும். திறமைக்கான மதிப்பைப் பெறுவீர்கள்.

 

கும்பம்

 

கும்ப ராசிக்குப் பெரியளவில் நன்மை நடக்கக்கூடியதாக இந்த புதன், குரு சேர்க்கை அமையும். குருவின் 9ம் பார்வை உங்கள் ராசி மீது விழக்கூடிய நன்மை நடப்பதால் உங்களின் எண்ணங்கள் நிறைவேறும். பலகால கனவுகள் நனவாகும். உங்களுக்கு செலவுகள் வந்தாலும் அது அர்த்தமுள்ளதாக, சுப காரியத்திற்கானதாகவே இருக்கும். சிலருக்கு குழந்தைப் பேறு போன்ற நல்ல விஷயங்கள் தேடிவரும். குடும்ப பிரச்னைகள் தீரும். புதிய திட்டங்களில் கவனமாக செயல்படுவது நல்லது. புதிய முதலீடு விஷயத்தில் அனுபவசாலிகளின் கருத்துக்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Comments
0

MOST READ
01
02
03
04
05