Header Logo
Mogo Academy

ஜோதிடம்
வியாபாரத்தில் தனித்திறமை கொண்ட ராசிகள்!

May 28, 2025 - 01:45 PM -

0

வியாபாரத்தில் தனித்திறமை கொண்ட ராசிகள்!
Mobitel inner

சில நபருக்கு இயற்கையாகவே தொழில், வியாபாரம் செய்யக்கூடிய திறன் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் அதனால் படித்து முடித்ததும் ஏதேனும் சிறிய வேலை செய்தாலும் அடுத்து அவர்கள் நினைக்கக்கூடிய தொழிலை தொடங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்வார்கள். அதனால் அதில் வெற்றியும் பெறுவார்கள். இப்படிப்பட்ட நபர்களுக்கு இயற்கையாகவே தொழில், வியாபாரத்தில் வெற்றி பெற தலைமைத்துவ திறன், பேச்சு, படைப்பாற்றல், தொழிலை நடத்திச் செல்லும் ஒழுக்கம் போன்ற குணங்களைக் கொண்டிருப்பார்கள். அவர்கள் தொழிலை விரிவுபடுத்தி, அதை வழிநடத்துபவராகவும், பலருக்கு வேலைத் தரக்கூடிய அற்புத நபராகவும் இருப்பார்கள். எந்தெந்த ராசிகளுக்கு இயற்கையாக தொழிலில் ஜொலிக்கும் வாய்ப்பு உண்டு என தெரிந்து கொள்வோம்.

 

மேஷம்

 

மேஷ ராசியை சேர்ந்தவர்கள் சிறந்த தலைவர்களாக இருப்பார்கள். இவர்கள் தைரியமான நபர்களாகவும், சுறுசுறுப்பானவர்களாக, எந்த சவாலையும் சமாளிக்கும் திறமை நிறைந்திருக்கும்.

 

போட்டி குணம் இருக்கும். அதனால் இவர்கள் சொன்ன சொல்லை பின்வாங்குவதில்லை. எதிலும் ஆபத்தை உணர்ந்து முடிவெடுப்பார்கள் என்பதால் பல நேரங்களில் இவர்களின் முடிவு சரியாக போகும். எதிர்காலம் தொடர்பாக தொலைநோக்கு பார்வையோடு செயல்படுவார்கள். பொதுவாக மேஷ ராசிக்கு ஆற்றலும், தைரியமும் அதிகம் என்பதால் தன்னுடைய முடிவு, செயலில் தீர்க்கமாக செயல்படுத்தி வெற்றி காண முடியும். இத்தகைய குணம் கார்ப்பரேட் உலகில் தலைமைத்துவத்திற்குச் சரியாக வரும். இவர்களிடம் இருக்கும் பிரச்னை கோபமும், உணர்ச்சிவசப்படுவதும் தான். இது இவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் என்பதால் நிதானமாக செயல்படுவது அவசியம்.

 

சிம்மம்

 

சிம்ம ராசியை சேர்ந்தவர்கள் ஆளுமைத் திறனும், படைப்பாற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் அதிக தன்னம்பிக்கை இருக்கும். சிம்ம ராசியினர் எப்போதும் தன் மீது அனைவரின் பார்வை இருக்க வேண்டும், ஒரு வெளிச்சம் குவிய வேண்டும் என நினைப்பார்கள். இவர்களிடம் இருக்கும் சிறப்பான ஆளுமைத் திறன் மற்றவர்களை ஊக்குவிக்கக்கூடியதாக நபராக இருப்பார்கள் என்பதால் தொழில் முனைவோருக்கான அனைத்து அம்சங்களும் இவர்களிடம் இருக்கும். ஒரு தொழில், நிறுவனத்திற்கு தலைமை நபராக,வெற்றியைப் பெற கடினமாக உழைக்கக்கூடிய நபராக இருப்பார்கள். இவர்களின் வார்த்தைகளைப் பிறர் மதிப்பார்கள்.

 

கன்னி

 

கன்னி ராசியை சேர்ந்தவர் நிலைமையை பகுப்பாய்வு செய்து, செயலை நடைமுறைப்படுத்தக்கூடியவர்களாகச் சிந்தனை கொண்டவர்கள். புத்திசாலித்தனமான இவர்கள் ஒவ்வொரு வேலையையும் புதிய விதத்தில் அணுகுவதால், விதிவிலக்காக இவர்கள் செய்யக்கூடிய தொழிலில் வெற்றி பெறுகின்றனர். திறமை மட்டுமல்லாமல், சிறப்பான ஒழுக்கம், ஒழுங்கமைக்கப்பட்ட விஷயங்களால் வேலையிலும், தன் திறமையை செயல்படுத்தவும் முடியும். சிக்கலான பணிகளுக்கு இது உதவக்கூடியதாக இருக்கும். கன்னி ராசிக்கு சிந்தித்து, திட்டமிட்டு செயலை செய்வதால், தான் செய்யும் தொழிலை சிறப்பாக நடத்தி அதை விரிவாக்க முடியும்.

 

மகரம்

 

மகர ராசியை சேர்ந்தவர்கள் இயல்பாகவே கடின உழைப்பு கொண்டவர்கள். தான் எடுத்த செயலை முடிக்காமல் விடமாட்டார்கள். அதனால் இயல்பாகவே வெற்றியை நோக்கி நகர்கிறார்கள். வெற்றிக்கான திட்டமிடும் இவர்கள், அதில் ஏதேனும் பிரச்னை, சிக்கல் என்றால் அதற்கு அனுபவசாலிகளிடம் ஆலோசனை கேட்க தயங்குவதில்லை. அதனால் இவர்கள் செய்யும் தொழில், வணிகத்தில் வெற்றி கிடைக்கும். வணிக செயல்பாடுகளில் சிறந்தவர்களாக இருக்கும் இவர்கள் பிரச்னைகளை கண்டு அஞ்சாமல் உறுதியோடு போராடுவார்கள். அதனால் மகர ராசியினர் தொழில், வியாபாரத்தில் வெற்றி அடைய முடியும்.

 

விருச்சிகம்

 

விருச்சிக ராசியினர் திறமை, வேகத்தோடு, புத்திசாலித்தனமாக செயல்படுவார்கள். அதனால் பிரச்னையை பார்க்காமல் அதன் வேரை அறிந்து அதற்கான தீர்வை பெற நினைப்பார்கள். மிக உறுதியான மன நிலை கொண்டவர்கள். இவர்கள் வேலை செய்தாலும், தொழில் செய்தாலும் அதில் ஒரு வலுவான இலக்கை நிர்ணயித்து, அதை தொடுவதற்கு தொடர்ச்சியாக முயற்சிப்பார்கள். பிறரின் மனநிலையை சிறப்பாக புரிந்து கொள்வார்கள். மிகவும் சாதூர்யமாக பேசும் திறன் உள்ள இவர்கள் புதிய உறவுகளை, நண்பர்களை எளிதாக புரிந்து கொள்ள வைப்பார்கள். இதனால் விருச்சிக ராசியினர் செய்யக்கூடிய தொழில், வியாபாரத்தில் பெரியளவில் சாதிக்க முடியும். 


MOST READ

காணொளி
அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

Mobitel Upahara