கிழக்கு
மட்டு. மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு பாதயாத்திரை...

May 29, 2025 - 12:01 PM -

0

மட்டு. மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு பாதயாத்திரை...

வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய ஆடிவேல் விழாவினை முன்னிட்டு யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி ஆரம்பமான இலங்கையின் மிக நீண்ட பாத யாத்திரையானது மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரத்தினை நேற்று (28) மாலை சென்றடைந்தது. 

மே மாதம் 1 ஆம் திகதி தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து சிங்கராஜா ஜெயராஜா வேல்சாமி தலைமையில் இந்த பாதயாத்திரை ஆரம்பமானது. 

வடக்கு, கிழக்கு, ஊவா ஆகிய 3 மாகாணங்களையும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மொணராகலை ஆகிய 7 மாவட்டங்களையும் இணைத்து, 55 நாட்களில் 98 ஆலயங்களைத் தரிசித்து 815 கிலோ மீற்றர் தூரத்தை நடந்து கடக்கும் இந்த புனித பாதயாத்திரை இலங்கையின் மிக நீண்ட தூர கதிர்காம பாதயாத்திரையாக கருதப்படுகின்றது. 

நேற்று மாலை மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு வருகை தந்த பாதயாத்திரை குழுவினர் அங்கு தங்கியிருந்து இன்று காலை மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விசேட வழிபாடுகளை மேற்கொண்டு பாதயாத்திரையினை ஆரம்பித்தனர். 

எதிர்வரும் 20 ஆம் திகதி உகந்தைமலை முருகன் ஆலயத்தில் இருந்து யால காட்டுவழிப்பாதை திறக்கப்படும் போது அதன் ஊடாக பயணித்து 25 ஆம் திகதி கதிர்காம கந்தன் ஆலயத்தினை சென்றடையவுள்ளதாக சிங்கராஜா ஜெயராஜா வேல்சாமி தெரிவித்தார். 

--

Comments
0

MOST READ
01
02
03
04
05