Jun 2, 2025 - 04:24 PM -
0
இன்று (02) மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது புதிய அபிவிருத்திக் குழுத் தலைவராக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி அவர்களின் பங்குபற்றலோடு இடம்பெற்றது.
இவ் கூட்டத்தின் போது 2024 ஆம் ஆண்டளவில் போரதீவுப்பற்றில் என்னால் ஒதுக்கப்பட்ட 157 மில்லியன் ரூபாய்களை திறம்பட நிர்வகித்து வேலைத்திட்டங்களை சிறப்பாக செய்த அரச அதிகாரிகளுக்கு வாழ்த்துக்களை பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.