Jun 2, 2025 - 07:24 PM -
0
இந்தியாவில் விடுமுறை முடிந்து பாடசாலைகள் திறப்பையொட்டி மக்கள் சென்னைக்கு திரும்புவதால், வெளிமாவட்டங்களில் இருந்து சென்னை வரும் பேருந்து கட்டணம் பன்மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
கோவை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சென்னை வருவதற்கான ஆம்னி பேருந்துகளின் கட்டணம் மூவாயிரம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் சாதாரண மக்கள் திகைத்து வரும் நிலையில், பொதுமக்கள் சென்னைக்கு திரும்ப வசதியாக 2,500 சிறப்பு பேருந்துகள் தமிழகப் போக்குவரத்து துறை சார்பில் இயக்கப்படுகிறது.