Header Logo

பல்சுவை
எதிர்ப்பு தெரிவிக்கும் ஆசிரியர் சங்கங்கள்

Jun 11, 2025 - 03:11 PM -

0

எதிர்ப்பு தெரிவிக்கும் ஆசிரியர் சங்கங்கள்

இந்தியாவில் அரசுப் பாடசாலைகளுக்கான வேலை நாட்களை அதிகப்படுத்தி அரசு புதிய நாட்காட்டியை வெளியிட்டுள்ள நிலையில், இதற்கு ஆசியர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 

உயர்நிலைப் பாடசாலைகளுக்கான நேரத்தை அரை மணி நேரம் அதிகரித்து இந்திய பொதுக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தற்போது வரை பாடசாலைகள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்பட்டு வந்த நிலையில், இனி காலை 9.45 மணி முதல் மாலை 4.15 மணி வரை பாடசாலைகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை மற்றும் மதியம் 15 நிமிடங்கள் வீதம் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

220 வேலை நாட்கள் வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இந்த கேரளா அரசு இந்த மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சனிக்கிழமை கூடுதல் வேலை நாளாக இருக்காது. 


ஆரம்ப பாடசாலைகளில் தொடர்ச்சியாக ஆறு நாட்கள் வாரத்தில் வராத இரண்டு சனிக்கிழமைகள் வேலை நாட்களாக இருக்கும். உயர்நிலைப் பள்ளிகளில் 6 சனிக்கிழமைகளும் வேலை நாட்களாகும்.

 

25 சனிக்கிழமைகள் உட்பட 220 பாடசாலை நாட்கள் கொண்டதாக புதிய கல்வி நாட்காட்டி உள்ளது. கடந்த ஆண்டை விட 16 சனிக்கிழமைகள் கூடுதலாக இந்த ஆண்டு வேலை நாட்களாக உள்ளன. புதிய கல்வி நாட்காட்டிக்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

 

கல்விச் சட்டத்தைப் பரிசீலிக்காமல் புதிய நாட்காட்டி தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். புதிய கல்வி நாட்காட்டி தேசிய கல்வி உரிமைச் சட்டத்திற்கு எதிரானது என்றும் ஆசிரியர் சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.


MOST READ

காணொளி
ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!

வௌிநாடுகளில் எங்களை பார்த்து சிரிக்கிறார்கள்!