Header Logo

கிழக்கு
கடலரிப்பு அபாயம் தொடர்பில் உடனடி தீர்வு

Jul 3, 2025 - 02:13 PM -

0

கடலரிப்பு அபாயம் தொடர்பில் உடனடி தீர்வு

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப்பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் வேண்டுகோளுக்கமைய அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்கிரம கல்முனை கடற்கரைப்பகுதியில் ஏற்படும் கடலரிப்பு அபாயம் உள்ள இடங்களை நேற்று (02) நேரடி விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டு உடனடி தீர்வு வழங்கினார்.

 

குறித்த நிகழ்வில் அரசாங்க அதிபருடன் கரையோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள், கல்முனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் Groynes - கடற்கரை பாதுகாப்பு கல்லணை திட்ட கொந்தராத்துகாரர் உள்ளிட்ட தரப்பினர்கள் கலந்துகொண்டனர்.

 

நிகழ்வில் நம்பிக்கையாளர் சபையினருடன் பிரதேச மீனவர்களும் இணைந்து கடலரிப்பு அபாயம் தொடர்பான கள நிலைமைகளை விளக்கினர்.

 

நிலைமையை ஆய்வு செய்த மாவட்ட அரசாங்க அதிபர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், கொந்தராத்துகாரருக்கும் இடைநிறுத்தப்பட்ட Groynes திட்ட வேலைகளை உடனடியாக ஆரம்பித்து இரண்டு வாரங்களுக்குள் முடிக்க உத்தரவுகள் வழங்கினார்.

 

இதன்பிரகாரம் கடலோர பாதுகாப்பு கல்லணை திட்ட வேலைகள் நாளை (04) ஆரம்பிக்கப்படுவதற்கான உத்தரவாதம் கொந்தராத்துகாரர் தரப்பில் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

--


MOST READ

காணொளி
செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

title