Header Logo

பல்சுவை
முதல்முறையாக போராட்ட களத்தில் விஜய்

Jul 13, 2025 - 11:17 AM -

0

முதல்முறையாக போராட்ட களத்தில் விஜய்

அஜித்குமார் மரண வழக்கை சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசு, உயர்நீதிமன்ற கண்காணிப்பில் விசாரிக்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினார்.

 

இந்தியாவின் சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளியான அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் பொலிஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அஜித்குமார் குடும்பத்தை நேரில் சந்தித்து விஜய் ஆறுதல் தெரிவித்தார்.

 

இதையடுத்து அஜித்குமார் மரண வழக்கை தமிழக அரசு சிபிஐக்கு மாற்றியது. இதனிடையே அஜித்குமார் மரண வழக்கை உயர்நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க வலியுறுத்தியும், காவல்துறை விசாரணை மரணங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தமிழ்நாடு அரசை வலியுறுத்தியும் தவெக சார்பில் விஜய் தலைமையில் இன்று (13) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

 

இந்த நிலையில், சென்னை சிவானந்தா வீதியில் தவெக தலைவர் விஜய் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது 'சாரி வேண்டாம்... நீதி வேண்டும்.' என முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும் தமிழகத்தில் இந்த லாக்-அப் மரணங்களால் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

டிக்கோயாவில் தொடர்மழையால்  வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

title